Skip to main content

வேட்பாளர் லிஸ்ட்! -கூட்டணிக்கு வேட்டு வைப்பதா என சலசலப்பு!!!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020
ddd

 

 

எப்போது தேர்தல் அறிவித்தாலும் சந்திக்க தயார் என்று திமுகவும், அதிமுகவும் சொல்லி வருகிறது. அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும், தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் குழுவான ஐ-பேக்தான் தேர்ந்தெடுக்கும் என செய்திகள் கசிந்துள்ளன.

 

பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேரைக் கொண்ட தி.மு.க. வேட்பாளர் பரிந்துரைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதை 3 பேர் பட்டியலாக்கும் வேலையும் நடக்குது. தி.மு.க.வில் சீட் வாங்க நினைக்கும் பலரும் ஐ-பேக் டீமை பிடிப்பதில் மும்முரமா இருக்காங்க. இதைப் புரிஞ்சிக்கிட்டு, ஐபேக் பட்டியலில் உங்கள் பெயரையும் இடம்பெறச் செய்கிறோம்னு அரசியலுக்கு அப்பாற்பட்ட கும்பல் ஒன்றும், வேட்பாளராகும் ஆசையில் உள்ள தி.மு.கவினரிடம் வருமானம் பார்க்க அலைகிறதாம்.

 

இந்த நேரத்தில், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும், அந்தந்த கட்சிகளிடம் தலா 3 பேர் கொண்ட பட்டியலை வாங்கி, நாமே தேர்ந்தெடுக்கலாம்ங்கிற யோசனையை ஐபேக்கின் பாஸான பிரசாந்த் கிஷோர், ஸ்டாலினிடம் சொல்லியிருப்பதா தகவல் கசிய, நல்லா இருக்கிற கூட்டணிக்கு வேட்டு வைப்பதான்னு தி.மு.க. சீனியர்களிடமும், கூட்டணியினரிடமும் சலசலப்பு ஏற்பட்டிருக்குது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விட்டால் திருப்பூரையும் மணிப்பூர் ஆகிவிடுவார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'If BJP enterTirupur will also become Manipur' - Chief Minister M.K.Stal's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய முதல்வர் ,''பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அரசமைப்பு சட்டத்தை மாற்றி விடுவார்கள்.  மோடியின் பாஜக அரசு வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு. கலவரம் செய்வது பாஜகவின் டிஎன்ஏவில் ஊறிப்போய் உள்ளது. பாஜகவை உள்ளே நுழையவிட்டால் சமூக அமைதியைக் கெடுத்து விடுவார்கள். அதிகாரத்தில் உள்ள பாஜக வென்றால், திருப்பூரை மணிப்பூர் ஆக்கி விடுவார்கள். பன்முகத்தன்மைக் கொண்ட இந்தியாவை பிரதமர் மோடி சிதைக்க பார்க்கிறார். சமூகநீதி என்ற வார்த்தையே பிரதமர் மோடிக்கு அலர்ஜியாக உள்ளது.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இட ஒதுக்கீட்டைத்தான் காலி செய்வார். வருகின்ற மக்களவைத் தேர்தல் இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடக்கின்ற போர். வீழ்ச்சிதான் மோடியின் சாதனை. மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் நிம்மதியாக நடமாட முடிகின்றதா? ஊடக நிறுவனங்களால் நிம்மதியாக செயல்பட முடிகிறதா? தங்களுக்கு கட்டுப்படவில்லை என்றால் ஒட்டுமொத்த நிறுவனங்களை விலைக்கு வாங்கி  பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவுவார்கள். உண்மையை எழுதும் பத்திரிகையாளர்களை சிறையில் அடைப்பது, அவர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பது எனப் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவு தான் இன்று ஊடகச் சுதந்திரத்தில் 180 நாடுகளில் 161 வது இடத்தில் இந்தியா இருக்கிறது. நம்முடைய பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி எவ்வளவு பெரிய அவமானம் ஏற்படுத்தி இருக்கிறார். மோடி சொன்ன புதிய இந்தியா அவருடைய ஆட்சியில் எப்படி இருக்கிறது? 32 விழுக்காடு மக்கள் ஊட்டச்சத்து குறைவோடு இருக்கிறார்கள். 44 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்தவில்லை. 30 விழுக்காடு மக்கள் அடிப்படை சுகாதார வசதி இல்லாமல் வாழ்கிறார்கள். 41 விழுக்காடு மக்களுக்கு வீடுகள் இல்லை. இப்படித்தான் உள்ளது மோடி சொன்ன புதிய இந்தியா.

மோடி ஆட்சியில் தானியங்களின் விலை 54 விழுக்காடு அதிகமாகிவிட்டது. பால் பொருட்களின் விலை 53 விழுக்காடு அதிகம், எண்ணெய் விலை 48 விழுக்காடு அதிகம், காய்கறி விலை 48 விழுக்காடு அதிகம், மருத்துவ செலவுகள் 71 விழுக்காடு அதிகம். கல்விச் செலவுகள் 60 விழுக்காடு அதிகம். இதெல்லாம் மோடி சொன்ன வளர்ச்சியா? 10 ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தோம் எனச் சொல்லிக் கொள்ளும் பாஜக, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதனால்தான் எந்த மேடையிலும் திட்டங்களையும், சாதனைகளையும் சொல்ல முடியவில்லை. ஆனால் திராவிட மாடலாட்சியைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டில் கஜானாவை தூர்வாரிய அதிமுகவினால் ஏற்பட்ட நிதிச் சுமை; ஒன்றிய பாஜக அரசு தரும் நிதி நெருக்கடி ஆகியவற்றை மீறி ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறோம்'' என்றார்.

Next Story

“அது தான் அதிமுகவுக்கு விழுந்த முதல் அடி” - திமுக வேட்பாளர் பிரகாஷ்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
DMK candidate Prakash interviewed and says That was the first blow to AIADMK

நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கட்சி சார்பாக தி.மு.க. வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரை பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு  பிரகாஷ் அளித்த பேட்டி பின்வருமாறு...

அ.தி.மு.க வேட்பாளர்கள் எல்லாம் சாதாரண பின்னணி கொண்டவர்கள். ஆனால், தி.மு.க நிறுத்தும் வேட்பாளர்கள் எல்லாம் பொருளாதார பின்னணி கொண்டவர்களையும், வலுவான ஆட்களை தான் நிறுத்துகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே?

“நான் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். சாதாரண வேட்பாளராக தான் நிற்கிறேன். அதனால், இந்த ஈரோடு நாடாளுமன்ற தேர்தல் பணமா? குணமா?. அவர்கள் பணத்தை நம்பி நிற்கிறார்கள்”.

ஏழைக் குடும்பங்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் கொடுத்திருக்கிறது என்று நீங்கள் பிரச்சாரம் செய்து வருகிறீர்கள். ஆயிரம் ரூபாய் கொடுக்கும் இந்த திட்டத்தில் நிதிச்சுமை இருக்கிறது என்று நீங்கள் சொல்கின்ற இந்த நிலையில் ஒரு லட்ச ரூபாய்க்கான நிதி ஆதாரங்கள் எல்லாம் எங்கிருந்து வரும் என்ற கேள்வி வருகிறதே?

“சாதாரண, அதானி அம்பானிக்கு எப்படி இத்தனை லட்சம் கோடி இன்றைக்கு வந்தது. ரெண்டு பேருக்கு மட்டும் குவியும் பணத்தை மக்களுக்கு பிரித்து கொடுக்க போகிறோம் அவ்வளவுதான்”.

அகில இந்திய அளவில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில், தி.மு.க.விற்கு அமைச்சரவையில் எந்த மாதிரியான மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

“எங்களுக்கு பதவி என்பது ஒரு பொறுப்பு தான். வாஜ்பாய் ஆட்சியிலும் அண்ணன் டி.ஆர். பாலு இருந்திருக்கிறார். அதேபோல், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையிலும் டி.ஆர்.பாலு இருந்திருக்கிறார். மந்திரி சபை என்பது எங்களுக்கு முக்கியம் கிடையாது. எங்களைப் பொறுத்தவரை இந்திய நன்றாக இருக்க வேண்டும், இந்தியா வலுப்பெற வேண்டும், சிறந்த ஆட்சி கொடுக்க. அதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் தலைவருடைய குறிக்கோள். அந்த குறிக்கோளுக்கு பின்னாடி எங்களுடைய இந்தியா கூட்டணியினுடைய 40 வேட்பாளர்களும் பின் தொடர்ந்து செல்வார்கள் என்று உறுதியாக கூறுகிறேன்”.

அ.தி.மு.க என்றால் கொங்கு மண்டலம் தான். கொங்கு மண்டலம் என்றால் அ.தி.மு.க தான், என்ற அந்த நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்று சொல்கிறார்களே?

“அந்த நம்பிக்கை எல்லாம் உள்ளாட்சி தேர்தலிலே உடைந்து விட்டது. உள்ளாட்சி தேர்தலில், அவர்கள் எந்த ஒரு மாநகராட்சியும் பிடிக்கவில்லை, எந்த ஒரு நகராட்சியும் பிடிக்கவில்லை. எல்லாமே தி.மு.க. பிடித்து விட்டது. அதுதான் அவர்களுக்கு முதல் அடி. இனிமேல் அடிமேல் அடி விழும். இனி, அதிமுகவுக்கு மேற்கு மண்டலமோ, கொங்கு மண்டலமோ அவர்களது கோட்டை கிடையாது. இந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தி.மு.க.வின் கோட்டையாக மாறப்போகிறது. ஏழு நாடாளுமன்ற தொகுதி இருக்கிறது. இந்த ஏழு நாடாளுமன்ற தொகுதியிலும் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும், நோட்டாவும் யார் முன்னாடி வருவார்கள் என்று போட்டி போடுவார்கள். இந்த ஏழு தொகுதிகளிலும் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும். கடந்த உள்ளாட்சித் தேர்தலிலே அவர்கள் கோட்டை எல்லாம் உடைந்து விட்டது”.

இந்திய கூட்டணியில் திமுக டெபாசிட் கூட வாங்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“அவர் எடப்பாடியில் தூங்கி கொண்டே இருப்பார் போல. வெளியே வந்து பார்க்க சொல்லுங்கள். ஏனென்றால், அவர் கட்சியையே எடப்பாடியில் தான் நடத்துகிறார் என்று அவரது கட்சிகாரர்களே சொல்கிறார்கள்”.

370, 400 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி சொல்கிறாரே?

“மோடி தூக்கத்தில் உளறிக் கொண்டிருக்கிறார். உறுதியாக சொல்கிறேன் 400 தொகுதிக்கும் மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நூறு தொகுதிகளில் தான் பாஜக வெல்லும்”.

முதலமைச்சரும், அமைச்சர் உதயநிதியும் இத்தனை கூட்டங்களில் பேசியும் ஒரு கூட்டத்தில் கூட விவசாயிகளைப் பற்றி பேசவே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறாரே?

“அவர் ஒரு விவசாயியாக இருந்து கொண்டு, விவசாயிகளின் கஷ்டம் தெரியாமல் இருக்கிறாரே. எத்தனையோ பிரச்சினைகள் இருந்திருக்கிறது. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்டை நாம் உருவாக்கினோம். ஆனால் அவர்கள் பத்தாண்டு கால கட்சியில் அதை செய்ய முடியவில்லை. அவர் ஒரு போலி விவசாயி என்று தான் சொல்வேன். மக்களுடைய உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். அதனால், எங்களுடையது விவசாயிகளை காப்பாற்றக்கூடிய அரசு”.

தி.மு.க மீண்டும் வந்துவிட்டால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று எடப்பாடி கூறுகிறாரே?

“காமெடியாக இருக்கிறது. கடந்த 1996 ஆம் ஆண்டிலேயே நாங்கள் சொல்லிவிட்டோம். திருப்பி அந்த டயலாக்கை அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அன்றைக்கு இருந்த அ.தி.மு.க வேறு. அது எம்ஜிஆருடைய அ.தி.மு.க, ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆனால், இன்றைக்கு இருப்பது வியாபார அ.தி.மு.க. அதை உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் புரிந்து  விட்டார்கள்” என்று கூறினார்.