Advertisment

''அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை இப்படிப் பேசலாமா?''-மேடையில் தமிழிசை வேதனை!

'' Can an Anna Award winner talk to me like this? -Tamilisai pain on stage!

Advertisment

இன்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கைத் தமிழிசை சௌந்திரராஜன்தொடங்கி வைத்தார். அப்பொழுது சிலர் தன்னை ஒருமையில் பேசுவது வேதனையைத் தருவதாக மேடையில் பேசினார்.

தமிழிசை பேசியதாவது, ''ஒரு இணையதளத்தில் வீடியோ ஒன்று பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒருவர் என்னைப்பற்றிப் பேசுகிறார். 'இரண்டு மாநிலத்தில் அவள் ஆளுநராக இருக்கிறாள்' என்று ஒருவர் பேசுகிறார். இரண்டு மாநிலத்திற்கு ஒரு பெண் கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமமான விஷயம். அதிலும் தமிழச்சி ஒருவர் இரண்டு மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கிறார் என்று ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் அண்ணா விருது வாங்கிய ஒருவர் ஒருமையில் பேசுகிறார். இவளெல்லாம் இரண்டு மாநிலத்திற்கு ஆளுநர் என்று. ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால், தயவுசெய்து திட்டுவதாக இருந்தாலும் தமிழ் மரியாதையோடு திட்டுங்கள். ஏனென்றால் தமிழுக்கு மரியாதை உண்டு. இல்லையென்றால் நீங்கள் தமிழரே கிடையாது'' என்றார் வேதனையுடன்.

Speech Thanjai
இதையும் படியுங்கள்
Subscribe