Skip to main content

''அமைச்சரவையே ஈரோட்டில்தான் இருக்கிறது; ஒரு இடத்தில் கூட காங்கிரஸ்காரர்களை காணவில்லை'' - செல்லூர் ராஜு பேட்டி

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

nn

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

 

இந்நிலையில், பிரச்சாரத்திற்கு இடையே செய்தியாளர்களைச்  சந்தித்துப் பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ''வாக்காளர்கள் சுபிட்சமாக; சுயேட்சையாக வாக்களிக்க வேண்டும். நீங்களும் வாக்கு கேளுங்கள். உங்கள் தலைவர் வரப்போகிறார், முதலமைச்சர் வருகிறார், அடுத்த வாரிசு உதயநிதி வருகிறார், நேற்று கனிமொழி வந்தார். இப்படி வரிசையாக வந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா அமைச்சர்களும் இங்கே தான் இருக்கிறார்கள். தமிழ்நாடு அமைச்சரவையே ஈரோடு கிழக்கு தொகுதியில் தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் திமுக கொடிதான் இருக்கிறது. பேருக்கு காங்கிரஸ் கொடியைத் தூக்குகிறார்கள். அதுவும் அவர்களுக்குள் போட்டி. நாங்கெல்லாம் காங்கிரஸ் கொடியைத் தூக்கமாட்டோம். நாங்கள் காலங்காலமாக திமுககாரர்கள். நாங்கள் ஏன் காங்கிரஸ் கொடியைத் தூக்குவோம் என்று சண்டை போட்டுக்கொள்கிறார்கள். ஒரு காங்கிரஸ்காரர்களைக் கூட பார்க்க முடியவில்லை.

 

நான் இரண்டு பூத்திலும் பார்க்கிறேன். ஒரு இடத்தில் கூட காங்கிரஸ்காரர்களே இல்லை. எங்கு பார்த்தாலும் திமுக அமைச்சர்கள், திமுககாரர்கள்தான் இருக்கிறார்கள். உலகத்திலேயே இதுவரை நடக்காத எது மாதிரியான புது மாதிரியாக இருக்கிறது. இப்படி எந்த தேர்தலையும் நான் பார்த்ததே இல்லை. எத்தனையோ இடைத்தேர்தலை பார்த்திருக்கிறோம். ஆளுங்கட்சிக்காரர்கள் கொஞ்சம் ஆட்கள் இருப்பார்கள். கொஞ்சம் வேலை பார்ப்பார்கள். அவர்களுடைய ஆர்வத்தை காண்பிப்பார்கள். ஆனால், இப்படி கூட்டிட்டு போய் ஆடு, மாட அடைக்கிற மாதிரி அடைக்கிறது, சினிமா போடுவது, பிரியாணி கொடுப்பது, பிஸ்கட் கொடுப்பது, பிஸ்லெரி பாட்டில் கொடுப்பது என ரொம்ப ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது ஈரோடு இடைத்தேர்தல்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.