Dindigul Sreenivaasan

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியிலுள்ள தூய்மைபணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் சீனிவசன் வழங்கினார்.

Advertisment

Advertisment

கரோனா எதிரொலி மூலம் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைபணியாளர்களுக்கு ஏற்கனவே மாஸ்க், கிருமிநாசினி, சோப்பு போன்ற கரோனா தடுப்பு உபகரணங்களுடன் அரிசி மற்றும் மளிகை பொருட்களைதொகுதி எம்.எல்.ஏ.வும், வனத்துறை அமைச்சருமான சீனிவாசன் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து தொகுதியிலுள்ள மாநகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள கட்சி பொறுப்பாளர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளையும்வனத்துறை அமைச்சர் சீனிவாசன்வழங்கினார். அதைத் தொடர்ந்துதான் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் இருக்கும் 438 தூய்மைபணியாளர்கள் மற்றும் திண்டுக்கல் ஒன்றியங்களில் பணிபுரியும் தூய்மைபணியாளர்களுக்கும் வேட்டி, சேலை,துண்டு உட்பட நலத்திட்ட உதவிகளை அந்தந்த பகுதிகளுக்கு சென்று அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.