Skip to main content

இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகள் விவரம்

Published on 10/03/2019 | Edited on 10/03/2019

 

17வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 26. வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 27ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் மார்ச் 29. தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி வெளியாகிறது. 
 

Byelection



இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதி விவரம்: பெரம்பூர், சோளிங்கர்,  சாத்தூர், விளாத்திகுளம், பரமக்குடி, திருப்போரூர், பூவிருந்தவல்லி, நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், பாப்பிரெட்டிப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சை, அரூர், மானாமதுரை, திருவாரூர்,  ஓசூர். 
 

ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வழக்கு நடைபெற்று வருவதால் அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை.


 

சார்ந்த செய்திகள்