Skip to main content

வரவு செலவு அறிக்கையை வீடு வீடாக வழங்கிய ஊ.ம.தலைவர்..! ராஜேஸ்வரி பிரியா பாராட்டு..!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020
Karuppampulam

 

 

நாகப்பட்டிணம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ளது கருப்பம்புலம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் வரவு செலவு அறிக்கையை துண்டு பிரசுரமாக வீடு வீடாக விநியோகம் செய்துள்ளார் ஊராட்சி மன்ற தலைவர். 

 

கருப்பம்புலம் ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் இரா.சுப்புராமன். இவர் பதவியேற்ற பிறகு கட்டிட பராமரிப்பு, குடிநீர், மின்சாரம் வரவு செலவு அறிக்கையை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு கொடுத்துள்ளார். கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மொத்த வரி வசூல், வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு என விவரமாக வரவு செலவு அறிக்கையை வீடு வீடாக சென்று கொடுத்துள்ளார். 

 

கருப்பம்புலம் ஊராட்சிமன்ற தலைவரான இரா.சுப்புராமனை சந்தித்து பாராட்டியுள்ளார் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா. 

 

Rajeswari Priya

 

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூ.ராஜேஸ்வரி பிரியா, அரசியலுக்கு படித்த இளைஞர்கள் வரவேண்டும் என்று மேடைக்கு மேடை நாங்கள் பேசுவதற்கான காரணம் நேர்மையான அப்பழுக்கற்ற நிர்வாகம் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான்.

 

அதன் அடிப்படையில் ஊராட்சிமன்ற தலைவர் பதவி ஏற்று 8 மாதங்கள் முடிவுற்ற நிலையில் கிராம வரவு செலவு கணக்குகளை வெள்ளை அறிக்கையாக கிராமத்தில் உள்ள அனைவரின் வீட்டு வாசலுக்கு கொண்டு சேர்த்த பெருமைக்குரிய கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமனை சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். எம்.சி.ஏ. படித்த அவர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பாக பணியாற்றி வருகிறார். சுப்புராமனை முன்னுதாரணமாக வைத்து படித்தவர்கள் இதுபோன்று நேர்மையாக பணியாற்ற வரவேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 1 கோடி பறிமுதல்; ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rs. 1 crore confiscation; Case registered against panchayat chairman

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மாவட்டம் எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா வீட்டில் ரூ.1 கோடி நேற்று (12.04.2024) தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 

Next Story

முறைகேடு புகார்; ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Complaint of malpractice Panchayat  president suspended

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் முறைகேடு புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவராக கீதா துளசிராமன் என்பவர் பதவி வகித்து வந்துள்ளார். இந்த சூழலில் சட்ட விதிகளை மீறி கட்டட வரைபடத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக அரசுக்கு நிதி இழப்பீடு செய்ததாகவும், முறைகேடாக தீர்மானங்களை நிறைவேற்றி ஊராட்சிக்கு சேர வேண்டிய நிதிகளை கால தாமதமாக செலுத்தியதாகவும் இவர் மீது புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இவர் மீதான முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் கீதா துளசிராமனை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.