Skip to main content

'பாஜகவினர் இப்போது எந்த நாட்டுக்கு விசா வாங்கப் போகிறார்கள்' - மு.க. ஸ்டாலின் கடிதம்

Published on 19/07/2023 | Edited on 19/07/2023

 

'BJP's going to buy visa for which country now'- M.K.Stal's letter

 

நேற்று பெங்களூருவில் 26 கட்சிகள் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'இந்தியா வெல்லும்; அதை 2024 சொல்லும்' என்ற தலைப்பில் கட்சித் தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 

அந்தக் கடிதத்தில், 'மதுரை மாநகரில் நமது உயிருக்கு நிகரான தலைவர் கலைஞரின் நூற்றாண்டுப் பெருமையாக ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்த நாள் அன்று திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் மக்களிடையே மகத்தான ஆதரவைப் பெற்றிருப்பதோடு இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது. மதுரைக்கு மட்டுமின்றி தமிழகத்தின் தென் மாவட்டங்கள் அனைத்திற்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.

 

நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நான் பங்கேற்றுக் கொண்டிருந்த பொழுது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் எம்.பி கௌதம சிகாமணி ஆகியோரைக் குறி வைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. திமுக இதுபோன்ற சோதனைகளையும் மிரட்டல்களையும் கடந்து நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கம். கலைஞர் இதிலிருந்து மீண்டு வருகின்ற பேராற்றலை நமக்குப் பயிற்றுவித்திருக்கிறார். பழிவாங்கும் பச்சையாக அரசியல் செய்யும் பாஜக அரசினுடைய தொடர் நடவடிக்கைகள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமான வெற்றியை எளிதாக்கி வருகிறது.

 

உண்மையான இந்தியாவின் எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டியது நமது முதன்மையான பணி. அச்சுறுத்தலுக்காக அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு பயன்படுத்துவது ஜனநாயக விரோதச் செயல். அமலாக்கத்துறையின் செயலைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், லாலு பிரசாத் ஆகியோர் கண்டித்துள்ளனர். இந்தியா என்ற சொல் பாஜகவுக்கு பிடிக்காத சொல்லாக ஆகிவிட்டது. 'இந்தியா பிடிக்காவிட்டால் பாகிஸ்தானுக்கு போ' எனப் பேசிய பாஜகவினர் இப்போது எந்த நாட்டுக்கு விசா வாங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. உண்மையான எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டியதுதான் நமது பணி. பல அரசியல்வாதிகள் மீது வழக்குகள் உள்ள போதிலும் அமைச்சர்களை மட்டும் குறிவைத்துள்ளது அமலாக்கத்துறை. இந்தியாவின் எதிரிகளான மதவாத, ஜனநாயக விரோத, மாநில உரிமைகளைப் பறிக்கும் சக்திகளை அடையாளம் காண்பீர். பாஜகவினரின் போலி தேசபக்தி முகமூடி கழன்று விழுவதைக் காண முடிகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.