இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசும் போது, “வரலாறு காணாத ஊழலை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு செய்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனியும் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை. திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்கை அமோக வெற்றிப்பெற செய்வதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நமது நன்றிக் கடனை செலுத்துவோம் என்று கூறினார்.
அதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசும் போது, “மகளிர் உரிமைத்தொகையை முறையாக கொடுக்காததால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது” என்றார். அவரை அடுத்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகமது முபாரக் பேசும் போது, “திண்டுக்கல் தொகுதியில் என்ன வளம் இல்லை. பூட்டுத் தொழில் உள்ளது சுற்றுலாத்தலமான கொடைக்கானல் உள்ளது. வழிபாட்டுத்தலமான பழனி உள்ளது. கைத்தொழிலுக்கு நெசவும், சுங்குடி தொழிலும் உள்ளது. புகழ் பெற்ற சிறுமலை வாழை, பலா உட்பட பல்வேறு தொழில்கள் உள்ளது என்னை வெற்றிபெற வைத்தால் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை தொழில் மிகுந்த நகரமாக மாற்றுவேன்” என்று கூறினார்