Skip to main content

மத துவேசங்களைப் பரப்புவதாக பா.ஜ.க. இளைஞரணிச் செயலாளர் மீது காவல்துறையில் புகார்!

Published on 17/08/2020 | Edited on 17/08/2020

                           

தமிழக பா.ஜ.க.வின் இளைஞரணிச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான சூர்யா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
                
பஹ்ரைனில் நடந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, ’ஏதோ ஒரு ஷாப்பிங் வளாகத்துக்குள் செல்லும் பெண்கள், விநாயகர் சிலைகள் அனைத்தையும் வெறுப்புடன் உடைத்தெறிகிறார்கள். அவைகளுக்கு அவர்கள் பணம் கொடுத்திருப்பார்கள் என்றாலும், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு மதவெறி?’ என பா.ஜ.க. இளைஞர் சூர்யா ட்விட்டரில் பதிவு செய்திருப்பதன் அடிப்படையிலேயே இந்தப் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.  
                 

புகார் கொடுத்துள்ள வழக்கறிஞர் மணிமாறன், மேற்கண்ட தகவல்களை தனது புகாரில் சுட்டிக்காட்டியிருப்பதுடன், சூர்யாவின் பதிவுகள் கடுமையான வகுப்புவாத அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்பதால் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153, 1513(1)(அ), 295(ஏ) 505(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
                  

இது குறித்து கருத்தறிய, நாம் சூர்யாவின் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து நாம் முயற்சித்தபோது, ஒரு துக்க நிகழ்வில் இருப்பதாகவும், பிறகு பேசுவதாகவும் மெசேஜ் அனுப்பியிருந்தார். ஆனால், தொடர்பு கொள்ளவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.