Skip to main content

தமிழகத்தில் ஏன் வர முடியலை...எது பண்ணாலும் எதிர்ப்பு...கோபத்தில் அதிரடி திட்டம் போட்ட பாஜக!

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி அரசு 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதில் என்னவென்றால் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் தேனி தொகுதியை தவிர போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. இந்தியா முழுவதும் பாஜகவிற்கு ஆதரவு அதிகமாக இருந்தாலும் தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பாஜகவிற்கான ஆதரவு குறைவாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவின் எதிர்ப்பு அலை அதிகமாகவே காணப்படுகிறது. 

 

bjp



இதனால் பாஜக தலைமைக்கு தமிழக பாஜக நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியை நிலவியது. தெலுங்கானா கவர்னராக தமிழிசை பதவி ஏற்று ஒரு மாதம் ஆகியும் தமிழக பாஜக தலைவரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கு தமிழக பாஜக நிர்வாகிகள் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் அதிருப்தியும் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதே போல் முத்தலாக் விஷயத்தில் பாஜக எடுத்த நிலைப்பாடு தான் வேலூர் தொகுதியில் அதிமுக, பாஜக கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. அதனையடுத்து காஷ்மீர் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சியனர் தீவிரம் காட்டியதும் பாஜகவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன் அமித்ஷா இந்தி பற்றி கூறிய கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அமித்ஷா தன்னுடைய நிலைப்பாட்டில் இந்தி பற்றி கூறிய கருத்துக்கு விளக்கம் அளித்தார். 

 

bjp



அதன் பின்பு எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்க்க பாஜக தலைமை சில அதிரடி திட்டங்களை வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, அதிமுக, திமுக இரண்டு திராவிட கட்சிகளும் நாடார் சமுதாய மக்களுக்கும், வன்னியர் சமுதாய மக்களுக்கும் அதே போல் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று அம்மக்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது. 


இதனால் ஜாதி அரசியலை முன்னெடுத்து அந்த குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு பதவி கொடுத்து அவர்களது ஆதரவை பெரும் நோக்கத்தில் பாஜக காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு சான்றாக சமீபத்தில்  தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜனுக்கு பதவி கொடுக்கப்பட்டது. இதே போல் DRDO மற்றும்  ISRO வின் உயர் பதவியில் நாடார்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறுகின்றனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது வருகிற சட்டமன்ற தேர்தலையும், பாஜக கட்சியை தமிழகத்தில் நிலை நிறுத்தவும் பாஜக திட்டம் போட்டு தற்போது இருந்தே செயல்பட ஆரம்பித்துவிட்டது என்கின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார்.