Skip to main content

சரியும் பா.ஜ.க!!! நிமிரும் காங்கிரஸ்?

Published on 19/11/2018 | Edited on 19/11/2018

இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்திஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நடக்கும் அரையிறுதியாகவே பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் 29, ராஜஸ்தானில் 25, தெலுங்கானாவில் 17, சத்திஸ்கரில் 11 மற்றும் மிசோரமில் 1 என மொத்தம் 83 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளதால் இந்த மாநிலத் தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றவையாக கருதப்படுகிறது.

 

 

cc


 
“காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற முழக்கத்துடன் 2014-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை சந்தித்தது பா.ஜ.க.. வரலாற்றில் முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. நூற்றாண்டு கண்ட இந்தியாவின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் தன்னுடைய வரலாற்றில் மிக மோசமான ஒரு தோல்வியைத் தழுவியது. 44 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 282 தொகுதிகளில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றன.

 

2015-க்குப் பிறகு 18 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று உள்ளது. இதில் காங்கிரஸ், பஞ்சாப் மற்றும் புதுசேரியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஆனால் 11 மாநிலங்களில்  பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியை பிடித்தன. அதே சமயம் 2014-க்குப் பிறகு 30 தொகுதிகளில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 6 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வென்றுள்ளது. 2014-ல் 16 தொகுதிகளில் வென்று இருந்தது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

 

ராஜஸ்தான் மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டு 2 மக்களவைக்கு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைதேர்தலில் அல்வார் தொகுதியில் 1,96,496 வாக்குகள் வித்தியாசத்திலும், அஜ்மீர் தொகுதியில் 84,414 வாக்குகள் வித்தியாசத்திலும் காங்கிரஸ் கட்சி வென்றது. இந்த தொகுதிகளில் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. முறையே 2.84, 1.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. மேலும் இங்கு அப்போது நடந்த சட்டமன்ற இடைதேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சச்சின் பைலட் தலைமையின் கீழ், காங்கிரஸ் ராஜஸ்தானில் உள்ளாட்சி தேர்தலில்களில் பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது. இது ஆளும் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

 

 

cc

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ரத்லம் தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 88,832 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதே தொகுதியில் 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. 1,08,457 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இருந்தது. 2016-ஆம் ஆண்டு ஷஹ்டோல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. 60,383 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. இதே தொகுதியில் 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. 2,41,301 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 2018-ல் இந்த மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைதேர்தல்களில் காங்கிரஸ் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.  2 சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் கமல்நாத் தலைமையில் சந்தித்த காங்கிரஸ் வெற்றிபெற்றது. பா.ஜ.க.-ன் இந்தத் தோல்வி 13 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள சிவராஜ் சிங் சௌஹான் அரசிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

 


தற்போது ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. இரு  மாநிலங்களிலும் ஆளும் கட்சிகளை சேர்ந்த முக்கிய கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். இரு மாநிலங்களிலும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் எளிதாக வெற்றி பெரும் வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ள போதிலும், உட்கட்சி பிரச்சனை காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும். 

 

சத்திஸ்கரில் ஆளும் ரமன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக மனநிலை இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி பிரச்சனைகள், அஜீத் ஜோகியின் தனிக்கட்சி என பல காரணிகள் சவாலாக உள்ளது. அதனால் இங்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

 

தெலுங்கானா மாநிலத்தில் சந்திர சேகர் ராவ்வின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு அதிருப்தி நிலவுகிறது. இருப்பினும் பெரிய எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மிகவும் வலுமையான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால் எளிதாக வெற்றி பெறலாம் என எண்ணி முன்கூட்டியே சட்டசபையை கலைத்தார் சந்திர சேகர் ராவ். ஆனால் எதிர்பாராத விதமாக காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் சில கட்சிகள் பெரிய வலுவான கூட்டணியை அமைத்துள்ளன. இது ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. முதலில் ராஷ்ட்ரிய சமிதி கட்சி எளிதாக வென்று விடும் என கருதப்பட்டது. தற்போதுள்ள நிலையில் வலுவான கூட்டணி காரணமாக வெற்றியின் அலை மாற தொடங்கியுள்ளது. 

 

40 தொகுதிகளை மட்டுமே கொண்டுள்ள மிசாரம் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் வெற்றிபெறுவது எளிதல்ல. இங்கு 2 மாநில கட்சிகள் மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி கடுமையாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியே அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும்.  

 

2019-ஆம் ஆண்டு மக்களைவை தேர்தலுக்கு முன்னதாக இந்த 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தல் ஒரு முன்னோட்ட பொதுத்தேர்தல்களாக பார்க்கப்படுகிறது. இன்று இருக்கும் சூழ்நிலைகளைப் பார்த்தால் இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரும் புத்துணர்ச்சி பெற்று வருகிறது. அதே சமயம் பல மாநிலங்களில் வெற்றி பெற்று வரும் பா.ஜ.க. இந்த பெரிய முக்கியமான மாநிலங்களில் செல்வாக்கை இழந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற பெரும்பாலான சட்டமன்ற தேர்தல்களில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் திட்டங்கள் வெற்றி பெற்று வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது. இந்த மாநிலத் தேர்தல் முடிவுகள் பொதுத் தேர்தலின் திசையை தீர்மானிக்கும் என்பது யதார்த்தம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.