Skip to main content

மூட்டிவிட்ட டெல்லி; முட்டிக்கொள்ளும் வானதி - அண்ணாமலை; அனல் பறக்கும் கமலாலயம்!

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

bjp Vanathi Srinivasan strategizing against Annamalai

 

அண்ணாமலை Vs பொன்னார்.. அண்ணாமலை Vs நயினார் நாகேந்திரன்... இந்த உரசலில் புதிதாக இணைந்துள்ளவர் வானதி சீனிவாசன். ஆம்.. அண்ணாமலை VS சீனிவாசனுக்கு இடையேயான முட்டல் மோதல் தற்போது பொதுவெளியில் கசியத் தொடங்கியுள்ளதுதான் கமலாலயத்தின் சூடான அப்டேட்.

 

தமிழ்நாடு மாநில பாஜக தலைவரான அண்ணாமலை பற்றிய இமேஜ், டெல்லித் தலைமையிடம் முற்றிலுமாக சரிந்துவிட்டது எனக் கூறப்படுகிறது. காரணம், கட்சியின் சீனியர்கள் அண்ணாமலையின் வார் ரூம் அரசியல் குறித்தும், கிரிமினல்களுடன் அவர் வைத்திருக்கும் நெருக்கம் குறித்தும், வசூல் விவகாரங்கள் குறித்தும், புகார்களை திரட்டி டெல்லியில் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், தமிழக பாஜக தலைமை மீது எரிச்சலான டெல்லி தலைமை, அண்ணாமலைக்கு எதிரான மனநிலையில் இருக்கும் வானதி சீனிவாசனுக்கு, ‘நீங்க தனியா ஆரம்பிக்கலாம்’னு சிக்னல் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

 

இதைத் தொடர்ந்து, மறைமுகமாக அண்ணாமலையை எதிர்த்துவந்த வானதி, இப்போது பகிரங்கமாகவே மோத ஆரம்பித்துவிட்டார். அண்ணாமலை ஏப்ரல் மாதம் பாதயாத்திரை அறிவித்திருக்கும் நிலையில், அதற்கு முன்பே வானதி, பழனிக்கு யாத்திரை போக தொடங்கினார். கடந்த 30-ஆம் தேதி, கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருந்து யாத்திரையைத் தொடங்கிய அவர், பொள்ளாச்சி, உடுமலை வழியாக நடந்து வந்து, பழனியை வந்தடைந்த வானதி, தற்போது யாத்திரையை நிறைவும் செய்துவிட்டார்.

 

யாருக்கு எதிராக அரசியல் செய்ய இந்த யாத்திரையை வானதி திட்டமிட்டாரோ, அந்த அண்ணாமலையை வைத்தே இந்த யாத்திரையை தொடங்கியது தான் ஹைலைட் என கமலாலயவாசிகள் காதைக் கடித்தனர். இந்த முட்டல் மோதல் இப்போது தொடங்கவில்லை என்றும் இது கோவை கார் சிலிண்டர் விபத்தின் போதே வெடிக்கத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் கூறினர். கோவை கார் சிலிண்டர் விபத்தின்போது, கோவை பாஜகவினர் பந்த் போராட்டத்தை அறிவித்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாஜக மாநில தலைமையை கலந்து ஆலோசிக்காமல் கோவை பாஜகவினர் தன்னிச்சையாக பந்த் போராட்டத்தை அறிவித்துவிட்டனர் என நீதிமன்றத்திலேயே அண்ணாமலை கூறியிருந்தார். இது கோவை பாஜகவினரை மிகவும் கடுமையாக எரிச்சலடையச் செய்தது. அப்போதிலிருந்தே, அண்ணாமலையின் மீது அதிருப்தியில் இருக்கும் கோவை பாஜகவின் ஒரு பிரிவினர், தன்னிச்சையாக செயல்பட முயல்வதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தன. இதன் நீட்சியாகத்தான் வானதியின் பாதயாத்திரை பார்க்கப்படுகிறது.

 

ஆனால், தன்னை வைத்தே தனக்கு எதிராக மைலேஜ் தேடுவதாக நினைத்த அண்ணாமலை, வானதிக்கு செக் வைக்கவும் தவறவில்லை என்கின்றனர் பாஜகவினர். ஆம், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான கோவை பாஜக தலைவர் உத்தம ராமசாமி வானதிக்கு போட்டியாக மருதமலைக்கு யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். இது வானதி தரப்புக்கு சறுக்கலாக பார்க்கப்படுகிறது. எங்கே மீடியா வெளிச்சமும் டெல்லியின் பார்வையும் தங்களை தாண்டி உத்தம ராமசாமி மீது பட்டுவிடுமோ என்பதில் வானதி தரப்பினர் கவலையாக இருக்கின்றனர்.

 

தமிழ்நாடு பாஜகவின் அதிகரிக்கும் கோஷ்டிபூசல் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக வெளியாகி வருவது, அக்கட்சியினரை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.