Skip to main content

ஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக! அதிர்ச்சியில் திமுக!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைப் போன்று, தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாக உள்ளார். தி.மு.க தனது இலவச இணைப்பில் உள்ள இரு கட்சிகளைக் கழற்றிவிட்டால், அது அவர்களுக்கு நல்லது" என்று எச்.ராஜா பேசியிருந்தார். இந்த நிலையில் 2ஜி வழக்கை விசாரித்த நீதிபதி ஓபி சைனி விரைவில் ஒய்வு பெற இருப்பதால் அந்த வழக்கை சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் அமர்வுக்கு மாற்றியுள்ளது. நீதிபதி அஜய் குமார் தான் தற்போது ப.சிதம்பரம் வழக்கை விசாரித்து வருகிறார் என்பது குறிப்படத்தக்கது. ஏற்கனவே 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராஜா, தயாநிதி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

dmk



அதே போல் அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நிலஉச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறியதாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வரும் 23 ஆம் தேதி ஆஜராகுமாறு  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், திமுக இல்லாத வேறு கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். வேறு கட்சியை சேர்ந்த நான்கு  வேட்பாளர்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி வழக்கு தொடர்ந்திருந்தார். 


இந்த வழக்கை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது  ஒரு தேர்தலில் வேட்பாளர்களை விட சின்னங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அப்படி இருக்கும் போது உறுப்பினராக இல்லாத நபர் அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா?" என கேள்வி எழுப்பினர். மேலும் இது குறித்து தேர்தல் ஆணையம், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரே நேரத்தில் திமுக எம்.பி.க்களை குறிவைத்து நடக்கும் விதத்தை பார்க்கும் போது பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமீப காலமாக ஒரு எதிர்க்கட்சி தலைவர் கைதாக போகிறார் என்று அடிக்கடி பேசி வருவது குறிப்படத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.