Skip to main content

திமுகவிற்கு செக் வைக்க உத்தரவு போட்ட பாஜக... ஆர்வம் காட்டிய காங்கிரஸ்... ப.சி.க்கு சோனியா போட்ட உத்தரவு!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, சென்னையில் தி.மு.க. தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் நடத்திய மெகா பேரணி பற்றி மத்திய, மாநில அரசுகள் என்ன நினைக்குது என்று விசாரித்த போது,  மத்திய அரசு கூறிய படி, மாநில அரசு பேரணியை தடுத்திருக்கலாம் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது.  பேரணியை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எடப்பாடி அரசுக்கு பா.ஜ.க. அரசு உத்தரவு போட்டதாக கூறப்படுகிறது. எடப்பாடி அரசும் மத்திய அரசுக்கு உத்தரவாதம் கொடுத்தது என்கின்றனர்.  அதனால் தான் போலீஸ் அனுமதி மறுப்பு, பேரணிக்கு முந்தைய நாள் இரவு திடீர் வழக்கு என்று நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் நீதிமன்றம் தி.மு.க.வுக்குப் பச்சைக் கொடியைக் காட்டியது. ஸ்டாலின் தலைமையில் நடந்த பிரம்மாண்டமான பேரணி, சென்னை மாநகரையே குலுக்கும் வகையில் நடத்தப்பட்டிருப்பதாக சொல்கின்றனர். மேற்கு வங்கத்தில் மம்தா நடத்திய பேரணியைப் போல் இந்தப் பேரணியும் மத்திய பா.ஜ.க. அரசை ஏகத்துக்கும் மிரட்டியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். 
 

dmk



அதே போல் திமுக நடத்திய பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் அதீத ஆர்வம் காட்டியதாக சொல்கின்றனர். தி.மு.க. தலைமையிலான இந்த பேரணியில் காங்கிரஸ் சார்பில் முதலில் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி தான் கலந்து கொள்வதாக இருந்தது. மறுநாள் டெல்லியில் நடக்க இருக்கும் ஆலோசனைக் கூட்டத்துக்காக அங்கே தங்கி இருந்த ப.சிதம்பரத்தைத் தொடர்புகொண்ட சோனியா, நீங்கள் சென்னையில் தி.மு.க. நடத்தும் பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் சார்பில் கலந்து கொள்ளுங்கள் என்று  கூற, அதைத் தொடர்ந்து உடனடியாக பிளைட் ஏறி, பேரணியில் கலந்துக்கிட்டார் ப.சி. காங்கிரஸைப் பொறுத்தவரை இனியேனும் அரசியல் களத்தில் தன்னை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளவேண்டும் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது. ஜார்கண்ட்டில் அதற்கு தெம்பூட்டும் ரிசல்ட் கிடைக்கத் தொடங்கியதுமே, காங்கிரசின் வேகம் இன்னும் கூடியிருப்பதாக சொல்கின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.