Skip to main content

பாஜகவின் அடுத்த டார்கெட் விஜய் சேதுபதி... விஜய் தரப்பு சப்போர்ட்... அதிர வைக்கும் அரசியல் பின்னணி! 

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

சினிமா கந்துவட்டி பிரபலம் மதுரை அன்பு, சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் வீடு, அலுவலகம் இவற்றிலெல்லாம் ஐ.டி.ரெய்டு நடந்ததற்கு சட்ட விரோத பணப் பரிவர்த்தனைதான் காரணம் என்பது அப்பட்டமான உண்மை. அதிலும் மதுரை அன்புவின் அசுரத்தனமான பணக் குவிப்பைப் பார்த்து ஐ..டி. அதிகாரிகளே ஆடிப்போய்விட்டனர்.
 

vijay



சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகமான ஆயகர் பவனுக்கு நேரில் வந்து ஆஜராகி விளக்கம் சொல்லுமாறு நடிகர் விஜய், மதுரை அன்பு, கல்பாத்தி அகோரம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப் பியது ஐ.டி. இதில் விஜய்யின் ஆடிட்டர்களும் அன்புவின் ஆடிட்டர்களும் ஐ.டி.அதிகாரிகள் முன்பு ஆஜராகி பண வரவு குறித்து விளக்கம் அளித்துள்ளனர். ஏ.ஜி.எஸ்.சினிமா நிறுவனத்தின் சி.இ.ஓ.வும், கல்பாத்தி அகோரத்தின் மகளுமான அர்ச்சனா தங்களது வக்கீல் மற்றும் ஆடிட்டருடன் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

 

anbuchelian



இப்படி நெருக்கடிக்கு மேல் நெருக்கடி வந்தாலும் எதற்கும் அசராத அன்பு, மதுரை செல்லூரில் 100 கோடி ரூபாய் எஸ்டிமேட்டில் பிரம்மாண்ட மால் தியேட்டர்கள் கட்டும் வேலையை ஆரம்பித்துள்ளார். அதே நேரம் தனது தம்பி அழகர்சாமியை மதுரை, ராமநாதபுரம் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக வெற்றி பெற வைத்துள்ள அன்பு, டெல்லிப் பிரதிநிதியான ஒருவரிடமும் வரிசையாக சினிமா எடுத்துக்கொண்டிருக்கும் கல்லூரி அதிபர் ஒருவரிடமும் ஐ.டி.அதிகாரிகளின் ஆக்ரோஷத்தைக் குறைக்கச் சொல்லும்படி சமாதானம் பேசி வருகிறாராம்.

அன்பு, அகோரம் ஆகியோரைக் குறிவைத்தது பணப்பரிவர்த்தனைக்காக என்றால் விஜய்யைக் குறிவைத்தது மதமாற்றப் பிரச்சனைக்குத்தான். ஆனால் அவரது கணக்கு கரெக்டாகவே இருந்தது. ஆனாலும், சம்பளம் என்ற பெயரில் கணக்கு எழுதி மத மாற்றத்திற்கும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கும் விஜய் தரப்பிலிருந்து தாராளமாக பணம் போவதை ஸ்மெல் பண்ணித்தான் இந்த ரெய்டு என பா.ஜ.க.தரப்பு சொன்னதை கடந்த இதழில் எழுதியிருந்தோம்.


நமது இதழ் கடைகளுக்கு வந்த அன்று காலையிலிருந்தே, பிரபல கல்லூரி அதிபரின் மகள் மூலமாக சினிமா பிரபலங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி வருவதாகவும், "மாஸ்டர்' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் விஜய் சேதுபதி மற்றும் பிரபல நடிகர்கள் ஆர்யா, ரமேஷ் கண்ணா, நடிகை ஆர்த்தி ஆகியோர் கிறிஸ்தவத்திற்கு மாறிவிட்டனர். மேலும் சில சினிமா பிரபலங்கள் மாறப் போகிறார்கள். கல்லூரி அதிபரின் மகளுக்கு விஜய் தரப்பு சப்போர்ட் இருக்கிறது. இதுக்காகத்தான் ஐ.டி.ரெய்டு நடந்தது எனவும் சோஷியல் மீடியாக்களில் வைரலனாது.

இதைப் பார்த்து டென்ஷனான விஜய் சேதுபதி, மதமாற்றம் பற்றி எதுவும் சொல்லவில்லை. "போய் வேற வேலை இருந்தா பாருங்கடா' என ஆவேசமாக ட்விட்டியுள்ளார். விஜய்யை அடுத்து விஜய் சேதுபதியை டார்கெட் செய்யும் பா.ஜ.க.வினரைப் பார்த்து, விஜய்யின் துப்பாக்கி பட டயலாக்கான "சஸ்பென்ஸோட சாவுங்க' என்பது போல அமைந்த விஜய் சேதுபதியின் ட்வீட், சமூக வலைத்தளங்களில் படு வைரலாகியுள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.