Skip to main content

"தமிழகக் கோவில்களை சாமியார்களிடம் ஒப்படைப்போம்" - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

bjp national president jp nadda election campaign at thanjai

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

 

அந்த வகையில், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (26/03/2021) தமிழகம் வந்தார். அதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

bjp national president jp nadda election campaign at thanjai

 

அப்போது அவர் கூறியதாவது; "வாரிசு அரசியலை முன்னெடுக்கும் தி.மு.க. கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். மாநில கட்சியாக இருந்தாலும் தேச உணர்வோடு அ.தி.மு.க. உள்ளது. 72 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உலகின் மருந்தகமாக இந்தியா உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டதால் தமிழகத்தில் கரோனா பாதிப்பில்லை. தமிழகத்தில் உள்ள 44,000 கோயில்களையும் சாதுக்கள், சாமியார்களிடம் ஒப்படைப்போம்" என்றார்.

 

இதனிடையே, சென்னையில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் ஜெ.பி.நட்டா பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் அமைச்சரும், ராயபுரம் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளருமான ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.