சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் இன்று(20.06.2024) தொடங்கியது. அப்போது, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் அ.தி.மு.க, பா.ம.க மற்றும் பா.ஜ.க ஆகிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தொடர்ந்து போராட்டம் நடத்திய அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றினர். இதனையடுத்து, பா.ம.க எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இருந்து பா.ஜ.கவினர் வெளிநடப்பு (படங்கள்)
Advertisment