மேலும் தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள் திரையரங்குகள், வணிக வளாகங்கள், அனைத்தையும் மார்ச் 31 வரை மூட முடிவெடுத்துள்ள தமிழக அரசு, திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளைத் தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம், சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிட வேண்டாம், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், "வைரசுக்கு பயந்து ஆலயத்தை மூடுறாங்க, பள்ளிக் கூடத்தை மூடுறாங்க, டாஸ்மாக்க ஏன் மூட முடியவில்லை அங்க நோய்ப் பரவாத ஆஃபீசர்" என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி பேசியது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், " ஒரு கூட்டம். இரு எதிர்க் கருத்துகள். மக்களுக்கு எது தேவையோ அதைத் தான் சட்டமாக்க வேண்டுமே தவிர. சட்டம் உருவாக்கிஅதற்குள் மக்களை அடைக்கக் கூடாது.- விஜய் என்றும், மதத்தைச் சொல்லி மனிதனைப் பிரிக்கும் முயற்சி நடக்குது. கொரோனாவை விட கொடிய வைரஸ் அதுகிட்ட நாம கவனமா இருக்கணும்.-விஜய் சேதுபதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.