இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று RSS அமைப்பை உருவாக்கிய பரம பூஜனீய டாக்டர். கேசவ பலிராம் ஹெட்கேவர் பிறந்த தினத்திற்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கல்வி, செல்வம், வீரம் மூன்றிலும் சிறந்து விளங்கியிருந்தும்கூட பாரததேசம் 800 ஆண்டுகள் முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கீழும், 200 ஆண்டுகள் ஆங்கிலேய கிறிஸ்துவ ஏகாதிபத்தியத்தின் கீழும் அடிமைப்பட்டு இருந்தது, நம் மக்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் அந்நியர்கள் உள்ளே வந்தார்கள். ஒரு பிரிதிவிராஜ் சவுகான் போரிலே தோற்றால் ஜெயச்சந்திரனின் துரோகம் இருந்தது. ஒரு கட்டபொம்மன் தூக்கிலே தொங்கினால் அதில் எட்டப்பனின் சதி இருந்தது, ஆகவே நாட்டு மக்களை தேசபக்த உணர்வோடு இணைப்பதற்காக RSS என்கிற அமைப்பை உருவாக்கிய ஒரு மகானின் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்வோம்” என்று கூறியுள்ளார்.