Skip to main content

திமுக எம்.பி.க்களுக்கு எதிராக வரிந்துகட்டும் பாஜக தலைவர்!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

திமுகவின் ’ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழக அரசால் மட்டுமே தீர்க்க முடியும் என்கிற பிரச்சனைகளை மனுவாக தயாரித்தது திமுகவின் வியூக வல்லுனர் குழுவான ஐ-பேக் டீம் ! இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்னின் பார்வைக்கு கொண்டு சென்றதை அடுத்து, மாவட்ட ஆட்சியர்களிடம் அதனை கோரிக்கை மனுக்களாக கொடுங்கள் என கட்சி மா.செ.க்களுக்கு உத்தரவிட்டது திமுக தலைமை.

 

 BJP leader to fight DMK MPs


மேலும், முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்கும் இதனை கொண்டு செல்லும் வகையில், தலைமைச் செயலாளர் சண்முகத்தை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு. தயாநிதிமாறன், டாக்டர் கலாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சந்தித்தனர். அந்த சந்திப்பில், தலைமைச்செயலாளர் தங்களை அவமதித்துவிட்டதாக பத்திரிகையாளர்களிடம் டி.ஆர்,பாலுவும் தயாநிதியும் ஆவேசப்பட்டனர். மூன்றாம்தர மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற வார்த்தைகளை பயன்படுத்தினார் தயாநிதி.

தயாநிதியின் அத்தகைய பேச்சு சர்ச்சையானது. தலித் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகள் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டது.  இந்த நிலையில், தமிழக பாஜகவின் தலைவராக இருக்கும் முருகன், ஏற்கனவே தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக இருந்தவர். தயாநிதியின் பேட்டியை கவனித்த அவர், இது குறித்து தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களிடம் விவாதித்தார். தயாநிதி மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸில் புகார் கொடுக்க வேண்டும் என முருகன் உட்பட பாஜக தலைவர்கள் தீர்மானித்தனர். அதனடிப்படையில் பாஜக பிரமுகர்கள்  நரேந்திரன், ராகவன், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் சென்னை கமிஷனர் ஏ.கே.விஷ்வநாதனை சந்தித்து புகார் கொடுத்தனர்.

 

 BJP leader to fight DMK MPs

 

இந்தநிலையில், திமுக தலைமை கண்டித்ததன் பேரில், தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார் தயாநிதிமாறன். ஆனாலும், தமிழக பாஜகவினர் இதனை ஏற்க தயாராக இல்லாத நிலையில், தமிழகம் முழுவதும் தயாநிதிக்கு எதிராகப் புகார் கொடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வன்கொடுமை சட்டத்தில் தயாநிதி கைது செய்யப்படும் வரை அவருக்கு எதிரான இந்த பிரச்சனை நீர்த்துப்போய்விடக் கூடாது என நினைக்கிறாராம் பாஜக தலைவர் முருகன். இதனால், ’’திமுக எம்.பி.க்களுக்கு எதிராக வரிந்து கட்டுவதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்’’ என்கிறார்கள் தமிழக பாஜகவினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.