Skip to main content

போங்கப்பா நீங்களும் உங்க ஒதுக்கீடும்... அதிமுகவின் ராஜதந்திரத்தால் கடுப்பான பாஜக!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

விருதுநகர் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இடங்கள் தொடர்பாக தி.மு.க. மா.செ.க்கள், கே.கே.எஸ்.எஸ்.ஆர். மற்றும் தங்கம் தென்னரசுவுடன் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும், 15 ஆம் தேதி இரவு வரையிலும் உடன்பாடு ஏற்படாமல் வெறுத்துப்போய், "தனித்துப்போட்டி' என்று சிலிர்த்து நின்று கோபமுகம் காட்டினார்கள் சி.பி.எம். கட்சியினர்.
 

dmk



காங்கிரஸ் தரப்பிலோ, “பெரிய கட்சி என்று எங்களைப் பார்க்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., வி.சி. கட்சிகளைப் போல எங்களுக்கும் யூனியனுக்கு ஒரு இடம்தானாம். சி.பி.எம். போல, தனித்துப் போட்டி என்றெல்லாம் பேச்சுக்குக்கூட எங்களால் எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை. ஒவ்வொரு யூனியனிலும் காங்கிரசுக்கென்று ஓட்டு வங்கி இருப்பதை தி.மு.க. ஏனோ உணரவில்லை. கூட்டணியிலிருந்து வெளியேறினால், அது அ.தி.மு.க.வுக்குத்தானே சாதகமாகிவிடும்? அதனால்தான் அமைதி காக்க வேண்டியதாகி விட்டது'' என்று புலம்புகின்றனர்.

 

admk



அ.தி.மு.க. மா.செ. கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் போன்றோர் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்திய விதத்தைப் பார்ப்போம்!

எடுத்த எடுப்பிலேயே, “நீங்க நிற்கணும்னு சொல்லுற இடத்துல நிற்கிறதுக்கு எங்காளுங்க ரெடியா இருக்காங்க. எங்ககிட்ட நெறய பணம் இருக்கு. உங்ககிட்ட அந்தளவு இருக்கா?'' என்று கேட்டு நிலைகுலைய வைத்துவிட்டு, "சரி.. உங்களால எவ்வளவு செலவு பண்ண முடியும்? அந்த வார்டுல நின்னா ஜெயிக்க முடியும்கிற நம்பிக்கை உங்களுக்கு எப்படி வந்துச்சு? அ.தி.மு.க. கூட்டணிங்கிறது இருக்கட்டும். உங்க சொந்த செல்வாக்கு என்ன?'' என்று சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டு, புள்ளிவிபரத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். பேச்சுவார்த்தை என்ற பெயரில் கூட்டணிக் கட்சியினரை வேட்புமனு தாக்கல் நாள் வரையிலும் இழுத்தடிப்பது ஆளும் கட்சியினரின் ராஜதந்திரமாம். பா.ஜ.க. தரப்பில்  அட, போங்கப்பா.. நீங்களும் உங்க ஒதுக்கீடும்..'' என்று எரிச்சலாகிவிட்டார்கள்.

 

admk



தே.மு.தி.க.வினரிடம், "இதுக்கு முன்னால நீங்க நின்னு ஜெயிச்ச இடத்தை மட்டும் கேளுங்க'' என்று அ.தி.மு.க. தலைகள் சிடுசிடு முகங்களைக் காட்டியிருக்கின்றன. சமத்துவ மக்கள் கட்சியினரின் நிலையோ பரிதாபம். அக்கட்சியின் விருதுநகர் மா.செ.க்கள் தரப்பில், பேச்சு வார்த்தை அனுபவத்தை சரத்குமாருக்கு மெசேஜாக அனுப்பிவிட்டார்கள். இதோ அந்த மெசேஜ்:


"உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்தோம் அண்ணா. நேற்றுதான் அழைப்பு விடுத்தார்கள். சந்திக்கச் சென்றோம். சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் ஏதோ பேசிவிட்டு, பகல் முழுக்கக் காத்திருக்க வைத்துவிட்டு, லேட் நைட்டில்தான் எங்களிடம் பேசினார். தே.மு.தி.க., பா.ஜ.க.வுக்கெல்லாம் சீட் ஒதுக்கிவிட்டார்கள். நம் கட்சிக்கு மட்டும் சரியான அணுகுமுறை இல்லை அண்ணா. நாம் நின்றால் நிச்சயம் வெற்றி பெறக்கூடிய ராஜபாளையம் 16-வது வார்டையும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தின் 9-வது வார்டையும் மட்டும்தான் கேட்டோம் அண்ணா!'' என்று உருக்கமாக விவரித்துள்ளனர். ஆனால் ச.ம.க. தலைவர் சரத்குமாரோ, "நாங்கள் கேட்டதில் 90% இடங்களை அ.தி.மு.க. கொடுத்து விட்டதால் எங்களுக்கு திருப்தி'' என சொல்லியிருக்கிறார்.

அ.ம.மு.க.வை பொறுத்தமட்டிலும், விருதுநகர் மாவட்டத்தை, தங்களின் கோட்டை என்றே சொல்லி வருகின்றனர். அக்கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட நிர்வாகியிடம் பேசினோம். “ரெடி பொசிஷன்ல இருக்கோம். 100 பெர்சன்ட் போட்டியிடறோம். ஆமா. எல்லா மாவட்ட கவுன்சிலர்.. எல்லா ஒன்றிய கவுன்சிலர்.. நாலு தொகுதிலயும் 11 மாவட்ட கவுன்சிலர்.. 113 ஒன்றிய கவுன்சிலர்ன்னு, எல்லாருமே வேட்புமனு தாக்கல் பண்ணிட்டாங்க. அதேமாதிரி, கிழக்கு மாவட்டத்துலயும் எல்லாரும் கட்டிட்டாங்க'' என்றார்.


"பணபலம் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சிந்துமுருகன், நேற்றுவரையிலும் அ.ம.மு.க.வில் இருந்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. பக்கம் வந்திருக்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் சீட் தராமல், இவரை வத்திராயிருப்பு ஒன்றியத்திலுள்ள நந்தம்பட்டியில் ஒன்றிய குழு உறுப்பினராகப் போட்டியிட வைக்கிறார்கள். இவர்தான் சேர்மன் வேட்பாளர் என்றும் சொல்லிவருகிறது அ.தி.மு.க. இப்படித்தான் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பணத்தை மட்டும் நம்பியே ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நிற்கின்றன'' என்கிறார்கள் லோக்கல் அரசியல் தெரிந்தவர்கள்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.