Skip to main content

பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்திய சம்பவம்... சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

மத்திய பா.ஜ.க. அரசுக்கு வெங்காய விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.  சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை ஏகத்துக்கும் ஏறியது. இதனால் வெங்காயம் காட்சிப் பொருளாக மாறி வருவது, மக்கள் மனதில் நெருப்பை அதிகமாகியுள்ளது. வெங்காயத்தை சீரியசாக  எடுத்துக்காததால், மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தையே கடந்த காலங்களில் ஏற்படுத்தியிருக்கு என்று சொல்லப்படுகிறது. இது பற்றியெல்லாம் கவலைப்படாத மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெங்காய விலை ஏற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோது, "நான் சாப்பாட்டில் வெங்காயமும் பூண்டும் சேர்த்துக்கிற சமூகத்தில் பிறக்கலை'ன்னு சொல்லி, எல்லாத் தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பை வாங்கிக்கொண்டார்.   

 

onion



மேலும் எதையும் சமாளிக்கிற சூழ்நிலை தெரியவில்லை என்று மக்களும் கவலையில் இருப்பதாக தெரிகிறது.  அதோடு,  ஜி.எஸ்.டி .வரி வசூலிப்பில் கெடுபிடியைக் காட்டிவரும் மோடி அரசு, அதிலிருந்து மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிதியை ஒவ்வொரு மாநிலத்திற்கும் செட்டில் பண்ணாமல் கோடிக்கணக்கில் நிலுவையில் வைத்து  இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. தமிழகத்துக்கு கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூபாய் 7,605 கோடியைத் தரவில்லை என்கின்றனர். இதுபோல் மோடி அரசால் நிதி தராமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் மாநிலங்கள், டிசம்பருக்குள் அவற்றை செட்டில் செய்யாவிட்டால், மோடி அரசுக்கு எதிராக உச்ச நீதின்றத்தில் வழக்குத் தொடுக்க அணி திரண்டுள்ளனர். இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டம் இதுகுறித்து விவாதிக்க, 18-ந் தேதி கூடுகிறது. 
 

 

bjp



இந்தச் சூழலில், நிலைமையை சமாளிக்க, ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று மோடிக்கு இவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். இதில் 5 சதவீத வரிகளுக்கு உட்பட்ட பொருட்களின் வரியை 12 சதவீதத்திற்கும், 12 சதவீத வரிகளுக்கு உட்பட்ட பொருட்களின் வரியை 18 சதவீதத்திற்கும் மாற்றினால்தான் சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர் என்கின்றனர். இதன் அடிப்படையில், ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியே கசிந்ததால், இப்போதே மோடி அரசுக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. இதை காங்கிரஸ் ப.சி. உள்ளிட்ட எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் கையில் எடுக்கத் தொடங்கி விட்டதாக சொல்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“வீரர்களுடைய மனைவிகளின் தாலியைப் பறித்தது யார்?” - டிம்பிள் யாதவ் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Question by Dimple Yadav on Who snatched the thali of the soldiers' wives?

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.