Skip to main content

தமிழகத்தில் காங்கிரஸ் பாணியில் பாஜக தலைவரை நியமிக்க திட்டம்? அதிர்ச்சி கொடுக்கும் அமித்ஷா!

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசையை தெலுங்கானா ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து செப்டம்பர் 8 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்கிறார் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இதனால் அடுத்த தலைவரை நியமிக்க பாஜக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி புதிய தலைவரை அறிவித்த போது, ஒரு தலைவர் மற்றும் நான்கு செயல் தலைவர்களை நியமனம் செய்தது. 
 

bjp



தற்போது பாஜகவிலும் இதே சூழல் உருவாகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, பாஜகவை தமிழகத்தில் வலுப்படுத்த மண்டலம் வாரியாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு தலைவரை நியமிக்க பாஜக தலைமை ஆலோசனையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கொங்கு மண்டலம், தென் தமிழகம், வட தமிழகம் என பிரித்து மண்டலத்திற்கு ஒரு செயல் தலைவரை நியமிக்கலாம் என்றும் பாஜக தலைமை முடிவெடுக்கலாம் என்று அரசியல் தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக பாஜக தலைவர் பதவி கனவில் இருக்கும் பாஜக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதே போல் கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.