மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளைநிறைவு செய்துள்ளது. தற்போது 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் பாஜகவானது9வது ஆண்டை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மேலும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில்நாடு முழுவதும் பாஜக சார்பில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள்,தலைவர்கள்மற்றும் மாநில முதல்வர்கள் எனப் பலரும் பாஜக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாககுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று பாஜகவின்9 ஆண்டுக்கால சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறைஇணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், "பாஜகஅரசுமக்களுக்கு அதிகாரமளிக்கவிரும்புகிறது. அதனால்தான் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. மக்களுக்கு பணியாற்றுவதை நாங்கள் விரும்புகிறோம். சிலர் இதில் அரசியல் செய்கின்றனர். வரும் நாடாளுமன்றதேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களில்பாஜகவெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்"என்றார்.