Skip to main content

“பி.ஜே.பி தான் ஆன்டி இந்தியன் நாமெல்லாம் இந்தியன்”- மாஸ் காட்டிய இயக்குனர் கரு. பழனியப்பன்

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

வரலாறு என்றாலே போர் அடிக்கிறது என்கின்ற காலம் மாறி. வேறு வழியின்றி வரலாறு கற்க வேண்டும் என்கின்ற காலமாக படிப்படியாக மாறிக்கொண்டிருக்கிறது நமது இந்திய மக்களின் மனநிலை. காவிகளின் ஆதிக்கமும் அவர்களின் அடக்குமுறையும். சாதிய பாகுபாடும், மதம் ரீதியான வரலாற்று மற்றும் சித்தாந்த தாக்குதல்களுமே இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இப்படியாக வரலாற்றை மீட்க வேண்டும் என்று பல தரப்பட்ட தனி நபர்களும், தொண்டு நிறுவனங்களும் புத்தகம் வாயிலாகவும், ஊடகம் வாயிலாகவும், வரலாறு சார்ந்த இடங்களுக்கு நேரில் சென்று படிப்பதுமென வரலாற்று கல்வி பணிகளை மேற்கொள்கின்றனர். அதன் பகுதியாக மதுரையை சேர்ந்த மூத்த வழக்கறிஞரான தி. லஜபதி ராய் அவர்கள் “நாடார் வரலாறு கருப்பா....காவிய....” என்கின்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி மதுரை தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டார். இந்த நூல் வெளியிடப்படக் கூடாது என்று வழக்குகள் தொடுக்கப்பட்டன. இறுதியில் மதுரை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியது.  இதில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, சுப. உதயகுமார், இயக்குனர் அமீர் மற்றும் கரு. பழனியப்பன், பேராசிரியர் அ. மார்க்ஸ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

karupalaniappan director

இதில் நூலினை பெற்றுக்கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை “நான் சாதியை ஆதரிப்பவள் இல்லை” என்று கூறி நாடர்கள் பற்றிய சிறு வரலாற்று சுருக்கத்தை பகிர்ந்தார்அடுத்ததாக பேசிய இயக்குனர் கரு. பழனியப்பன் தனக்கான சீற்றம் பொருந்திய பேச்சினை கொண்டு மக்கள் கவனத்தை தன் பக்கம் இழுத்தார் அவர் ”காவிகள் தொடர்பாக எப்போதெல்லாம் எங்கெல்லாம் சான்ஸ் கிடைக்கிதோ அப்போதெல்லாம் நான் மறக்காம பதிவு செஞ்சிடுவேன் ” என்று தொடக்கத்திலேயே தனது காவி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். நடந்து முடிந்த இஷா யோகா மையத்தின் சிவ ராத்திரி குறித்து “எங்களை போன்ற சாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்களின் விழாக்களுக்கு அனுமதி கேட்டால் மறுக்கப்படும் நிலையில், பல ஹெக்டேர் யானை பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இஷா யோகா மையம் ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவா ராத்திரி நிகழ்ச்சிக்கு நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி வருகை தருகிறார்” மேலும் “இயற்கை பேரிடரை பார்வையிட வராத மோடி தேர்தல் நெருங்கும் வேலையில் மாசத்திற்கு இரண்டு முறை வருவது” ஏற்றுகொள்ள முடியாது என்றார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி குறித்து பேசிய அவர் “இந்து மத பிரதிநிதி என்று கூறும் அனைவரும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் தான். இப்போவே திவாலான மேலும் திவலாகக்கூடிய கம்பெனியில தெரிஞ்சே சீட்டு கட்டுவோமா. அதே தான் திரும்பவும் பி.ஜே.பி-க்கு வோட்டு போடாதிங்க, பி.ஜே.பி தான் ஆன்டி இந்தியன் நாமெல்லாம் இந்தியன்” என்றார் அழுத்தமாக. “நமகெல்லாம் ஸ்லீப்பர் செல்ஸ் பி.ஜே.பி-லையும் இருக்காங்க, தமிழிசையும், பொன்னாரும். எப்போவுமே பொன்னார் சுப்ரமணிய சுவாமியா ஆக முடியாது, அதே தான் தமிழிசையும் நிர்மலா சீதாராமனா ஆகா முடியாது. ஒரு நாள் இந்த பிரச்சன கிளம்பும் அப்போ அவங்க தான் நம்ம ஸ்லீப்பர் செல்ஸ்” என்று தனது உரையை சாதிய எதிர்ப்புடன் முடித்துக்கொண்டார். 


தொடர்ந்து பேசிய பேராசிரியர் மார்க்ஸ் மற்றும் இயக்குனர் அமீர் “ மத வெறுப்பையும், மத வெறியையும் தூண்டும் இயக்கமே ஆர்.எஸ்.எஸ் அதனுடைய அஜெண்டாவிற்கு நம்மை அறியாமலேயே தள்ளப்படுகிறோம், மீண்டும் ஒரு இந்து ராஜ்யத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ்- இன் நோக்கம். அவர்கள் இந்து மதத்தில் உள்ள சாதியையோ, வர்ணத்தையோ எதிர்கவில்லை” என்றார் மார்க்ஸ் தற்போதைய தி.மூ.க-வின் நிலை குறித்து கூறிய இயக்குனர் அமீர் “சமூக நீதியை வெளிக்கொண்டு வந்ததில் பெரும் பங்கு தி.மூ.க-விற்கு உள்ளது. சாதி இல்லை என்று பேசிய பெரியாரிசத்தின் கிளையான தி.மூ.க தொகுதிக்கான எம்.பி- களை தேர்ந்தெடுக்கும் போது வேறு வழியின்றி சாதிவாரியான எம்.பி- களை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளபட்டிருப்பது வருத்தமளிக்கிறது, வெளி நாடுகளில் இந்தியா காந்தியின் நாடு என்று தான் அறியப்படுகிறது. அனால் இங்கோ பட்டேல் இன மக்களின் வாக்குகளை பெறுவதற்கு 3000 கோடிக்கு சிலை வைக்கும் அவல நிலையில் இந்திய உள்ளது” என்றார் ஆதங்கத்துடன். மேலும் “காந்தியை கொன்ற கோட்சேவை நினைவில் கூறவாவது அனைவரும் காந்தியின் நினைவு நாளை கொண்டாட வேண்டும்” என்றார் அமீர் இறுதியாக நூலாசிரியர் தி. லஜபதி ராய் அவர்கள் தனது நூலை பற்றி பேசிவிட்டு “காவி வரலாறு அடிமைப்படுத்தும். அதனால் நம்முடைய வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்” என்று சுருக்கமாக முடித்துகொன்டார். நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் தமிழ் சாரலோடு நிறைவுற்றது நிகழ்ச்சி 

- அஹமத்

சார்ந்த செய்திகள்

Next Story

“சுயமரியாதை தான் முக்கியம்” - பதவியை ராஜினாமா செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
BJP MLA says Self-respect is important and he Resigned his position in gujarat

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீதி அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும், தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

குஜராத் மாநிலத்தில், முதல்வர் புபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 182 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிக பெரும்பான்மையாக 156 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. இதில் ஒரு முறை சுயேட்சையாகவும், இரண்டு முறை பா.ஜ.க சார்பில் வதோதரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ கேதன் இனாம்தார், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

இது குறித்து கேதன் இனாம்தார் கூறுகையில், “எனக்கு எந்தவித அழுத்தமும் தரவில்லை. நீண்ட காலமாக, சிறியவர்கள், முதியோர்கள் மற்றும் கட்சியில் நீண்டகாலமாக தொடர்புள்ளவர்களை கட்சி கவனிப்பதில்லை என்பதை உணர்ந்தேன். இது குறித்து நான் தலைமைக்கு தெரிவித்துள்ளேன். நான் 11 ஆண்டுகளுக்கு மேலாக சவ்லி தொகுதியை பிரதிநிதிப்படுத்தியுள்ளேன். பாஜகவின் தீவிர உறுப்பினரானதில் இருந்து, கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். ஆனால் 2020ல் நான் சொன்னது போல் சுயமரியாதையை விட பெரியது எதுவுமில்லை. இது என்னுடைய குரல் மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சித் தொண்டர்களின் குரல். மூத்த கட்சிக்காரர்களை புறக்கணிக்கக் கூடாது என்று நான் முன்பே கூறியிருக்கிறேன். நமது மக்களவைத் தேர்தல் வேட்பாளர் ரஞ்சன் பட் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்காக இரவு பகலாக உழைப்பேன். ஆனால் இந்த ராஜினாமா எனது ஆழ்மனதின் விளைவு” என்று கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டில், கேதன் இனாம்தார் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பியபோது, கட்சி அதை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், மீண்டும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற கேதன் இனாம்தார், அதன் பின்னர் பா.ஜ.கவில் இணைந்து 2017 மற்றும் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பாஜக ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள்; நடவடிக்கை எடுக்க உத்தரவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
School students at BJP road show; Order to take action

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில், கோவை சாய்பாபா காலனியில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை பாஜக பேரணிக்கு அழைத்து வந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.