Skip to main content

எட்டா... பத்தா... கூட்டணி குறித்து தங்கமணி, பியுஸ் கோயல் பேச்சு வார்த்தை...

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

admk bjp




அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை இன்று இரவு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களது ஆழ்வார்பேட்டை வீட்டில் நடந்தது. இதில் அதிமுக சார்பாக அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி மேலும் பிரபாகர் உள்ளிட்ட அக்கட்சியின் தேர்தல் கூட்டணி குழுவினர் கலந்துகொண்டனர்.
 

அதேபோல் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இதில் கூட்டணி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அப்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழ்நாட்டில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறது, இருந்தாலும் பல்வேறு கட்சிகள் கூட்டணிக்குள் வருகிறார்கள். இதனால் எங்களுக்கு 15 தொகுதிகள் அல்லது குறைந்தபட்சம் 12 தொகுதிகள் வேண்டும் என்றார். இதைக் கேட்ட அமைச்சர் தங்கமணி 15 தொகுதிகள் என்ன 20 தொகுதிகள்கூட நாங்கள் கொடுக்கத் தயார், ஆனால் நமது கூட்டணி பலமான கூட்டணியாக இருக்க வேண்டும் என்றால் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதுதான் சரியாக இருக்கும். ஆகவே பாஜகவுக்கு அதிகபட்சம் 8 தொகுதிகள் கொடுக்கலாம் இதுதான் எங்கள் கட்சியின் நிலைபாடு எனக் கூறியிருக்கிறார்.
 

அதற்கு பதில் கூறிய பொன். ராதாகிருஷ்ணன் 8 தொகுதிகள் சரியாக வராது 2 டிஜிட் என்ற அடிப்படையில் 10 தொகுதிகள், மேலும் பேசுங்கள் எனக் கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்து பாஜக இதுவரை எங்கே 10 தொகுதிகளில் போட்டியிட்டது எனக் கேட்டிருக்கிறார். அதற்கு கொஞ்சம் கடுமையாக பேசிய பொன். ராதாகிருஷ்ணன் அப்படி எல்லாம் பேசக்கூடாது இப்போது நிலைமை வேறு. உங்கள் அரசாங்கம் எந்த நிலைமையில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும். மத்தியிலுள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு மீண்டும் நிலைக்க வேண்டும். தமிழ்நாட்டில் நீங்கள் இன்னும் இரண்டு வருடம் அரசாங்கத்தை நடத்த வேண்டும். இது எல்லாம் நாம் நடத்துகிற இந்தக் கூட்டணியில்தான் உள்ளது. இந்தக் கூட்டணி தேர்தலுக்காக மட்டும் அல்ல, எதிர்கால அரசியல் போக்கையும் கவனித்து தான் நாம் செய்கிறோம். ஆகவே தொகுதிகளைப் பற்றி எண்ணிக்கையைப் பற்றி நீங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது என கூறியிருக்கிறார். 
 

அதற்கு அமைச்சர் தங்கமணி நீங்கள் கூறுவதெல்லாம் 100% உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் என்ன மாதிரியான பிரச்சாரங்களை செய்து வருகிறது என்று உங்களுக்கு தெரியும். இந்த நிலைமையில் நீங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்தால் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நீங்களும் உணர வேண்டும் என கூறியிருக்கிறார். அதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்காக கேட்கவில்லை, தமிழ்நாட்டின் மூலமாக இங்கு அதிகமான எம்பிக்களை தேர்வு செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். அதன் அடிப்படையில் நீங்கள் உங்கள் தலைமையிடம் பேசுங்கள் என்று கூறியிருக்கிறார். அதிமுக சார்பில் இறுதியாக 8 என்றும், பாஜக சார்பில் இறுதியாக 10 என்றும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது... 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.