Skip to main content

திமுக, அதிமுகவிற்கு பணிந்த பாஜக!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆரம்பித்து வைத்து, கூட்டணிக் கட்சிகளில் தொடங்கி, ராஜ்யசபாவில் கட்சி பேதம் பார்க்காமல் தமிழக எம்.பி.க்கள் தூக்கிய போர்க்கொடியால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் நடத்திய அஞ்சல்துறைத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்திருப்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிற மத்திய அரசிடம் போராடிப் பெற்ற வெற்றிங்கிறது ஒரு பக்கம், தமிழக கட்சிகள் ஒரு பிரச்சினையில் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து வெற்றி பெற்றிருப்பது இன்னொரு பக்கம். மேலும்  அஞ்சல்துறை பணியிடங்களுக்கான தேர்வில் மாநில மொழிகளை ரத்து செய்து, இந்தி ஆங்கிலத்தில் மட்டும் கடந்த 14-ந் தேதி நடத்தப்பட்டதற்குத்தான் இத்தனை எதிர்ப்பு. தமிழில் தேர்வு நடத்த மத்திய அரசை வலியுறுத்தணும்னு சட்டசபையில் தி.மு.க. குரல் கொடுத்தது. 
 

dmk



அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், இது தொடர்பாக டெல்லி மக்களவையில் நீங்கள் குரல்கொடுங்கள். நாங்கள் மாநிலங்களவையில் குரல் கொடுக்கிறோம்ன்னு சொன்னார். தி.மு.க. வலியுறுத்திய தீர்மானத்தை எடப்பாடி அரசு நிறைவேற்றாததால், அவங்க வெளிநடப்பு செய்தாங்க. அதே நேரத்தில், லோக்சபாவில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் பா.ஜ.க. அரசிடம் இது சம்பந்தமா வாதமும் செய்தார்கள். இந்த நிலையில் ராஜ்யசபாவில்  தி.மு.க. ஸ்டார்ட் செய்ததும் ராஜ்ய சபாவில் அ.தி.மு.க.வும் தொடர்ந்தது. எப்பவும் எதிரும் புதிருமா இருக்கிற இரண்டு கட்சிகளும் ஒரே குரலில் எதிர்ப்புத் தெரிவித்ததையும், கூட்டணிக் கட்சிகளும் வரிஞ்சி கட்டுறதையும் பார்த்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நடத்தப்பட்ட அஞ்சலகத் தேர்வை ரத்து செய்வதாக அறிவிச்சதோட, தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் இனி நடத்தப்படும்ன்னு அறிவிச்சாரு. இது தமிழகத்தின் ஒருமித்த குரலுக்குக் கிடைச்ச வெற்றி என்று அனைத்து கட்சிகளும் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.