Skip to main content

பிக் பாஸ் லாஸ்லியாவின் காதலுக்கு தந்தை போட்ட அதிரடி கண்டிஷன்... வெளிவந்த ரகசிய தகவல்!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கவின், லாஸ்லியாவின் காதல் விவகாரம் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இவர்கள் காதல் பிரேக் ஆப் ஆகிவிட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த நிலையில் லாஸ்லியாவின் காதல் குறித்து அவரது தோழி ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். லாஸ்லியா, கவின் காதல் பிரேக்கப் ஆகவில்லை என்றும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வரும் என்றும் கூறியுள்ளார். 
 

losliya



நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா இலங்கையை சேர்ந்தவர். இலங்கையில் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிக்பாஸில் பங்கேற்றார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது கவினும், லாஸ்லியாவும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. இவர்களுடைய காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதன்பிறகும் கவினுடன் நெருங்கி பழகி வந்தார். கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றபோது கதறி அழுத லாஸ்லியா, தன்னையும் வெளியேற்றும்படி பிக்பாஸிடம் கெஞ்சினார். இதனால் அவர் கவினை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று உறுதியானது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு கவினும் லாஸ்லியாவும் தங்களின் காதல் குறித்து வாய் திறக்கவில்லை. பிக்பாஸ் கொண்டாட்டம், பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டி என சந்திக்க இருவருக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
 

 

losliya



இதனால் லாஸ்லியா, கவின் முறிந்து விட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் லாஸ்- கவின் காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை ஓகே சொல்லிவிட்டதாகவும் ஆனால் அவர் ஒரு நிபந்தனையை விதித்திருப்பதாகவும் லாஸ்லியாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஓராண்டு கவினும், லாஸ்லியாவும் பேசாமல் பழகாமல் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிபந்தனையை அவர்கள் சரியாக கடைபிடித்தால் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாக கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாகதான் இருவரும் வெளியில் பங்கு பெரும் நிகழ்ச்சியில் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.