Advertisment

அடித்து உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்; கர்நாடகத்தில் பரபரப்பு 

A battered voting machine; Sensation in Karnataka

Advertisment

கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு இன்று (மே 10, 2023) தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ளன.

தற்போதைய கர்நாடக முதல்வர்பசவராஜ்பொம்மைஷிகோவன்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன்விஜயேந்திராஷிகாரிபுராதொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வருணா தொகுதியில் முன்னாள் முதல்வர்சித்தராமையாவும்,கனகபுராதொகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரும் போட்டியிடுகின்றனர்.கல்புர்கிமாவட்டம்சித்தாபுராதொகுதியில் காங்கிரஸ் தலைவர்மல்லிகார்ஜுனகார்கேமகன்பிரியங்க்கார்கேவும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமிசன்னப்பட்டினாதொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.எச்.டி.தேவகவுடா பேரன்நிகில்குமாரசாமிராமநகராதொகுதியில் போட்டியிடுகிறார்.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி கர்நாடகத்தில் 52.03% வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாகவிஜயபுராமாவட்டத்தில்பசவனபகேவாடிதாலுகாவில்மசபினால்கிராமத்தில் கிராம மக்களுக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதாக வதந்திகள் பரவியதைஅடுத்துகோபமடைந்த கிராம மக்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து உடைத்தார்கள். தேர்தல் அதிகாரிகளின்கார்களும்கவிழ்க்கப்பட்டு சேதங்களுக்கு உட்படுத்தப்பட்டன.

Advertisment

அதேபோல்பத்மநாபநகர்பகுதிகளிலும் சில இளைஞர்கள் தங்களுடைய எதிரிகள் மீது வாக்குச்சாவடியிலேயே தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால்வாக்களிக்ககாத்திருந்த பெண்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். அதேபோல்பல்லாரிமாவட்டத்திலும் காங்கிரஸ் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

elections karnataka
இதையும் படியுங்கள்
Subscribe