Advertisment

''அவர்பாட்டுக்கு ஏதோ ஒன்றை பேசிவிட்டு போயிருக்கிறார்''- பாலகிருஷ்ணன் வேதனை!

Balak

Advertisment

நேற்று பிரதமர் கலந்துகொண்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதல்வர் நீட், ஜி.எஸ்டி, கச்சத்தீவு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக கோரிக்கைகளை வைத்து மேடையில் பேசியிருந்தார்.

இந்நிலையில் முதல்வரின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கும்படி பேசாதது வேதனையைத் தருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''நரேந்திர மோடி நாட்டுமக்கள் எதிர்கொண்டுள்ள எந்த பிரச்னையைப்பற்றியும் பேசாமல், தமிழக முதல்வர் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வைத்த எந்த கோரிக்கைக்கும் பதிலளிக்காமல் அவர் பாட்டுக்கு ஏதோ ஒன்றை பேசிவிட்டு போயிருக்கிறார். இப்படிப்பட்ட மோடி அரசை எதிர்த்து பலமான இயக்கத்தை நாடுமுழுவதும் நடத்தவேண்டும் என்பதன் அடிப்படையில்தான் இன்று இடதுசாரி கட்சிகளும், விசிகவும் சேர்ந்து போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம்'' என்றார்.

Chennai modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe