Skip to main content

மோடியிடம் விருது பெறும் தமிழக அமைச்சர்...

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

 

மத்திய அரசின்  'தூய்மை இந்தியா' திட்டத்தில் சிறந்த மாநகராட்சிக்கான விருதினை, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்குகிறார் பிரதமர் மோடி! இதற்கான விழா, டெல்லியில் நாளை நடக்கிறது. 
 

தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழக உள்ளாட்சி துறை அப்படி என்ன சாதித்தது? என கோட்டை வட்டாரங்களில் விசாரித்த போது, "சேவையே கோவை ; கோவையே தேவை என்கிற தலைப்பில் கோவை மாநகராட்சியை சுத்தப்படுத்தி அழகுப் படுத்தும் செயல் திட்டத்தை அமைச்சர் வேலுமணி சமீபத்தில் துவக்கினார். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் அவர் கலந்தாலோசித்த போது, 'எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் குப்பைகளை சாலை ஓரங்களிலும், கண்ட கண்ட இடங்களிலும் கொட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மக்கள். குப்பைத் தொட்டிகள் இருந்தாலும் அதில் குப்பைகளை கொட்டுவதில்லை. அப்படியே வீசிவிட்டு சென்று விடுகின்றனர். அதனால், கோவையை குப்பை இல்லா நகரமாக மாற்ற எடுக்கப்படும் முயற்சிகள் விரயமாகின்றன' என அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

modi



 

அதன் தொடர்ச்சியாக நடந்த விவாதங்களில், குப்பையை மக்கள் கொட்டும் இடங்களில் பூக்களை வைத்தும் மாவுகளை வைத்தும் கோலங்கள் வரையுங்கள். பூக்கோலங்களையும் மாக்கோலங்களையும் பார்க்கும் மக்கள் அந்த இடங்களில் குப்பையை கொட்டமாட்டார்கள். குப்பைத் தொட்டியை தேடிச் சென்று குப்பையைக் கொட்டுவார்கள். இந்த பழக்கத்தை நம் மக்களிடம் இயல்பாக நிலை நிறுத்திவிட்டால் அதன்பிறகு தாங்கள் வசிக்கும் பகுதிகளை குப்பைக்கூளங்களால் அசுத்தமாக்க மாட்டார்கள். கோலம் வரைவதற்காக அந்தந்தப் பகுதி பெண்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தலாம். கோலம் வரைவதை ஒரு இயக்கமாகக் கூட உருவாக்கலாம் ' என அமைச்சர் வேலுமணி யோசனைத் தெரிவித்திருக்கிறார். அந்த யோசனையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள, மத்திய அரசின் ' தூய்மை இந்தியா ' திட்டத்தின் கீழ், மாக்கோலம் பூக்கோலம் பெண்கள் இயக்கத்தை அமைச்சர் வேலுமணி துவக்கி வைக்க, கோவை மாநகராட்சியின் குப்பைப் பகுதிகள்  தற்போது கோலங்களால் காட்சியளிக்கின்றன. கண்ட இடங்களில் குப்பைகள் கொட்டுதல், கழிவுகள் கொட்டுதல்,  மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் போன்ற அசுத்தங்கள்  ஒழிக்கப்பட்டன. இதனால் கொசுக்களின் உற்பத்தி தடுக்கப்பட்டிருப்பதால் டெங்கு, மலேரியா, டைப்பாய்டு போன்ற நோய்களும் தடுக்கப்பட்டுள்ளன. இந்த காரணங்களுக்காகத்தான் கோவை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் வேலுமணிக்கு விருது கிடைத்திருக்கிறது " என பின்னணிகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

Minister



 

இது ஒருபுறமிருக்க, முதல்வர் எடப்பாடி  பழனிசாமி  உத்தரவின் பேரில், அமைச்சர் வேலுமணியின் கண்காணிப்பில் உள்ளாட்சித் துறை சார்பில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்  இந்தியாவிலேயே முதல்முறையாக 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பிரமாண்டமான "கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை" சென்னை கொடுங்கையூரில்  உருவாக்கியிருக்கிறது. 348 கோடி ரூபாய் மதிப்பில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 3 - ஆம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.  இந்தியாவிலேயே கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தில் இது ஒரு மைல்கல் என  உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முதல்கட்ட வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
First Phase Voting; Preparations are intense

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 950 வேட்பாளர்கள் உள்பட 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரன் ரிஜிஜு, எல். முருகன், ஜிதேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் சஞ்சீவ் பல்யான் என 8 பேர் போட்டியில் உள்ளனர். தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் உள்ளார். மேலும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, தமிழகத்தின் முன்னாள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதே சமயம் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதே போன்று திரிபுரா மாநிலம் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பதற்றமான 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமடைந்துள்ளது.