நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் 10 சதவீத ஓட்டுகள் பெறுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதில், உங்கள் கணிப்புபடி உங்கள் கட்சியின் கள நிலவரம் என்ன என்ற கேள்விக்கு, நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட சிறப்பாகவே இருக்கிறது. 5 சதவீதத்துக்கு மேல் நாங்கள் வாக்குகள் பெற்றாலே பெரிது என்றார்கள். ஆனால் நான் அப்படி திருப்திபட்டுக் கொள்ளவில்லை. பதிலாக எங்களை நாங்களே தீவிரப்படுத்திக் கொண்டோம். பணம் கொடுக்காமல் முழுக்க முழுக்க பிரசாரத்தை மட்டுமே நம்பினோம். நிச்சயம் 10 சதவீத வாக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.