Skip to main content

முதல்வர் விழாவில் கூட்டம்... கூட்டம்... கேள்விக்குறியான சமூக இடைவெளி!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 25.06.2020 வியாழக்கிழமை கோவை மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது தமிழக அரசும் மத்திய அரசும், மருத்துவத் துறையும் அறிவிப்பு செய்யும்படி தனிமனித இடைவெளி என்ற சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அவரின் கூட்டம் நடக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி உள்ளார்கள். 

 

இதற்கு எடுத்துக்காட்டாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நசியனூர் பகுதியில் அன்று மாலை அவினாசி அத்திக்கடவு திட்ட ஆய்வுப் பணியை எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். அப்போது அங்கு குறைந்தபட்சம் சுமார் 300 பேருக்கு மேல் வந்திருந்தார்கள். அவரது நிகழ்ச்சி மேடையில் ஏறக்குறைய 50 பேருக்கு மேல் சமூக இடைவெளி இல்லாமல் நின்று கொண்டிருந்தார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள், அதிகாரிகள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் நெருக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு விளம்பரத்திலும் 'விழித்திரு, வீட்டில் இரு, விலகிஇரு' எனக் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் அவர் உத்தரவிட்டுருக்கவேண்டும் ஆனால் அப்படிச் செய்யவில்லை. இது வழக்கமாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியாக அதாவது கரோனா காலத்திற்கு முன்பு எப்படி ஒரு அரசு விழா நடக்குமோ அது போலத்தான் நடந்தது, இதில் முதல்வர் வரும்போதும் பிறகு அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் அடுத்து அவர் செல்லும் போதும் அந்தக் கூட்டம் நெருக்கடியில் சிக்கித் தவித்தது. 

 

ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்று கூறும்போது ஒரு மாநில முதல்வரே இப்படி ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா? அல்லது அந்தக் கூட்டத்தில் தனது கட்சிக்காரர்களை இப்படி அனுமதிக்கலாமா? எனக் கேள்விகளைச் சமூக ஆர்வலர்கள் கேட்டுள்ளார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'காற்றில் ஊழல் செய்த ஒரே கட்சி திமுக' - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்பில் ஈடுபட்டு வருகிறது. திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது கூட்டத்தில் பேசிய அவர், ''ஓட்டு போட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது தான் எங்களுடைய லட்சியம். உங்களைப் போல குடும்ப உறுப்பினர்களை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்து கொள்ளையடிக்க வைப்பது எங்களுக்கு லட்சியம் அல்ல.

எங்கள் கட்சியை பொறுத்தவரை ஜனநாயக கட்சி. மக்களுக்காகவே உழைக்க வேண்டும் என எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் எங்களுக்கு அற்புதமான பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். உங்கள் அப்பாவைப்போல் எல்லாம் எங்களது தலைவர்கள் கிடையாது. உங்கள் கட்சி ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அது கட்சி அல்ல. ஆனால் அதிமுக மக்களுக்காக நன்மை செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி. ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட கடைக்கோடியில் இருக்கக்கூடிய மக்களுக்கு கூட அதிமுக அரசுக்கு உதவுகின்ற மனப்பான்மையை இன்று வரை இருக்கிறது.

அண்ணா கண்ட கனவை நினைவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் எம்ஜிஆர் அண்ணா திமுக என்ற கட்சியை துவக்கினார். அன்றிலிருந்து இன்று வரை பல பொன்விழா கண்டிருக்கிறோம். யாராலும் இந்த கட்சியை அசைக்க முடியவில்லை. எவ்வளவு பிரச்சனைகள் இடையில் ஏற்பட்டது. கலைஞர் இருந்தபோதும் ஏற்பட்டது ஸ்டாலின் இருக்கும் பொழுதும் ஏற்பட்டது. இந்த கட்சியை உடைக்க வேண்டும்; செயல்படாது தடுக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகள் செய்தார்கள். அத்தனையும் இந்த மக்கள் துணையோடு தகர்த்து எறிந்த கட்சி அதிமுக.

சில எட்டப்பர்களும் இருந்தார்கள். இந்த சின்னத்தை முடக்கணும் என்று திமுகவோடு சேர்ந்து நமக்கு எவ்வளவு தொல்லைகளை கொடுத்தார்கள். ஆனால் திமுகவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காங்கிரஸ் மத்தியில் இருந்த பொழுது திமுகவினர் பலர் அமைச்சர்களாக இருந்தார்கள். அந்த நேரத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ஊழல் செய்து தமிழ்நாட்டை தலைகுனிய வைத்த கட்சி திமுக. கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்த ஒரே கட்சி திமுக. இந்தியாவிலே  ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் என்று சொன்னால் அது திமுக அரசாங்கம் ஒன்றுதான்'' என்று கடுமையாக சாடினார்.