இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான விடுதலைப் போராட்ட வீரர், தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து பொன். சண்முகவேலு என்பவர் இயக்கத்தில், ‘அதனால்தான் அவர் நல்லகண்ணு’ என்ற பெயரில் ஆவணப்படம் தயாராகி வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இந்த படத்தை இயக்குனர் சமுத்திரக்கனி தயாரிக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா மே 1 ஆம் தேதி காலை சென்னையில் நடக்கிறது, இதை நடிகர் சூர்யா வெளியிடுகிறார், தோழர் நல்லக்கண்ணு பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படம் சினிமாவாக வெளிவருவது கம்யூனிஸ்ட் தோழர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.