BalakrishnaReddy

அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணரெட்டி, ஒரு கலவர வழக்கில் தண்டனை பெற்றதால், அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. அப்படி விலகும் போதே, தன்னுடைய ஓசூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால், அங்கே தனக்குப் பதில் தன் மனைவி ஜோதிக்கு சீட் கொடுத்து, அவரை ஜெயிக்கவச்சி மந்திரி ஆக்கணும்னு எடப்பாடியிடம் உறுதிமொழி வாங்கிக்கிட்டார். அதன்படி ஓசூரில் அவர் தன் மனைவிக்கு சீட் கேட்டிருந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக. அதில் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் எஸ்.ஜோதி வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக.

Advertisment