Skip to main content

அண்ணாச்சிக்கு சவாலாக அருப்புக்கோட்டை!

Published on 29/03/2021 | Edited on 29/03/2021

 

Aruppukottai constituency dmk, admk and mnm


நக்கீரன் மார்ச் 25 இதழில், ‘சட்டமன்றத் தேர்தல் 2021 – 234 தொகுதிகளில் யார் முன்னிலை? பண விநியோகத்துக்கு முன் கள நிலவரம்!’ என்னும் தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டு, நக்கீரன் டீம் எடுத்த சர்வே விபரங்களை வெளியிட்டுள்ளோம். அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தி, நக்கீரன் இதழில் ‘கள நிலவரம்’ வெளிவந்திருக்கும் நிலையில், நக்கீரன் இணையதள வாசகர்களுக்காக, அருப்புக்கோட்டை தொகுதி குறித்த விரிவான கட்டுரை இதோ: 

 

கே.கே.எஸ்.எஸ்.ஆர். (திமுக) – வைகைச்செல்வன் (அதிமுக) – உமாதேவி (ம.நீ.ம.) 

 

எம்.ஜி.ஆரை எம்.எல்.ஏ. ஆக்கி, 1977இல் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்த தொகுதி அருப்புக்கோட்டை. தற்போது, அரசியலில் சீனியரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திமுக வேட்பாளராகவும், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், அதிமுக வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர். 

 

பெயர் சொல்லி அழைத்து, தோளில் கை போட்டு பேசும் ‘அண்ணாச்சி’, இத்தொகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். ‘பா.ஜ.க. - அதிமுக கூட்டணி தமிழகத்தில் உயிர் பெற்றுவிடக்கூடாது..’ என்று நாள் தவறாமல் பிரார்த்தனை செய்துவரும் சிறுபான்மையினரின் வாக்குகள் திமுகவுக்குச் செல்வது இவரது பலம். ஆனாலும், மருமகள் ஒருவர் ‘தங்கச் செருப்பு’ அணிந்துவந்தார் என்று பெருமையாகச் சொல்லப்படும் ‘ஜெயவிலாஸ்’ குடும்பத்திலிருந்து, ம.நீ.ம. வேட்பாளராகப் போட்டியிடும் உமா தேவி பிரிக்கும் ‘தெலுங்கு’ வாக்குகள், இவருக்கு மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனை ஈடுகட்டும் விதத்தில் முத்தரையர் ஆதரவு வாக்குகள் இருக்கின்றன.

 

Aruppukottai constituency dmk, admk and mnm

 

திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும், உமாதேவி பின்வாங்கவில்லை. அதேநேரத்தில், உமாதேவியின்  சொந்தபந்தங்களே, ‘ம.நீ.ம. வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு யாரும் என் வீட்டு வாசல்படி ஏறக்கூடாது. மீறினால் மரியாதை இல்லை’ என்று கதவில் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் வேண்டுமானால் மதம், ஜாதி அடையாளத்தை விரும்பாதவராக இருக்கலாம். இத்தொகுதியில் ம.நீ.ம. வேட்பாளருக்கு, அவருடைய ஜாதி அடையாளமே ‘ப்ளஸ்’ ஆக இருக்கிறது.

 

2011இல் இத்தொகுதியில் போட்டியிட்டபோது, வைகைச்செல்வன் கொடுத்த பச்சை டோக்கனை, இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார்கள் வாக்காளர்கள். ஏரியாவுக்கு ஒரு வாக்குறுதியாக ரூ.2000, ரூ.3000 என நிர்ணயித்து, அந்த டோக்கனைத் தந்துள்ளனர். அப்போது குடியிருந்த வீட்டு வாடகையைக்கூட தரவில்லை என்ற தகவல் தொகுதியில் பரவிக்கிடக்கிறது. அதிமுக தரப்பு, பழைய விவகாரத்தை ஒத்துக்கொண்டு ‘தவறு செய்ததற்குத் தண்டனையாக தோற்கடித்து, ஐந்து வருட அரசியல் வாழ்க்கையில் எழுச்சி என்பதே இல்லாமல் செய்துவிட்டீர்களே!’ என்று எதிர்ப்பவர்களை ‘கூல்’ செய்கிறது.

 

Aruppukottai constituency dmk, admk and mnm

 

‘அண்ணாச்சி 10 கோடி செலவழித்தால், நாங்க 20 கோடி செலவழிப்போம். ஓட்டுக்கு ரெண்டாயிரம் கூட தரமுடியும். தமிழ்நாட்டுல திமுக புள்ளிகளில் யார் யார் ஜெயிக்கக்கூடாதுன்னு 27 பேர் அடங்கிய ஒரு லிஸ்ட் வச்சிருக்கோம். அதுல அண்ணாச்சியும் ஒருத்தர். தேர்தல் அலுவலர்கள் இதுக்கு ஒத்துழைப்பாங்க’ என்று அதிமுக தரப்பில் ‘வெற்றி நிச்சயம்’ என்று ஒருவித கணக்கோடு பேசி வருகின்றனர்.

 

தேமுதிக வேட்பாளராக ரமேஷ் போட்டியிடுகிறார். ஏற்கனவே அமமுக வேட்பாளரை அறிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் இவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றனர். அந்தப் புகைச்சல் வேறு கூட்டணி வாக்குகளுக்கு வேட்டு வைக்கிறது. நாம் தமிழர் வேட்பாளராக உமா போட்டியிடுகிறார். 

 

‘ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுங்க. ம.நீ.ம. வேட்பாளரை ஆதரித்து உங்க ஓட்டை வேஸ்ட் ஆக்காதீங்க. அமைச்சர் தொகுதியாக அருப்புக்கோட்டையை ஆக்குறது உங்க கையில்தான் இருக்கு.’ என்று திமுகவினர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்காக ‘கேன்வாஸ்’ செய்கின்றனர். 

 

இருதரப்பிலிருந்தும், கடைசி நேர பணப்பட்டுவாடா, வாக்கொன்றுக்கு ரூ.300-லிருந்து ரூ.500 வரை இருக்கும் என்று பேசப்படுகிறது. அண்ணாச்சி எளிதாகப் பெறக்கூடிய வெற்றியை, சவாலானதாக மாற்றிவிட்டார் உமாதேவி! 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.