Skip to main content

நீங்க தேர்ந்தெடுத்த எம்எல்ஏவை நீக்கிட்டாங்க... பாடம் புகட்ட வேண்டாமா? ஸ்டாலின் பேச்சு

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

 

சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. 
 

முன்னதாக அரவக்குறிச்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
 

இந்த தேர்தல் ஏன் வந்தது? மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இதே தொகுதியில் நின்று வென்றவர்தான் செந்தில் பாலாஜி. அவர் ஐந்து ஆண்டுகாலம் இந்த தொகுதிக்கு நல்லது செய்யணும் என்று வாக்களித்து வெற்றி பெற வைத்தீர்கள். ஆனால் அவரால் ஐந்து வருடம் பணியாற்ற முடிந்ததா? திருவாரூரில் இடைத்தேர்தல் என்றால் கலைஞர் மறைந்ததால் இடைத்தேர்தல். சூலூரில் ஆளும் கட்சி உறுப்பினர் மறைந்ததால் இடைத்தேர்தல். திருப்பரங்குன்றம் ஆளும் கட்சி உறுப்பினர் மறைந்ததால் இடைத்தேர்தல். ஆனால் இந்த தொகுதிக்கு ஏன் இடைத்தேர்தல். 18 எம்எல்ஏக்கள் பதவியை பறித்தபோது செந்தில் பாலாஜியின் பதவியையும் சேர்த்து பறித்தார்கள். 
 

aravakurichi by election mk stalin campaign



 

 

18 எம்எல்ஏக்கள் ஒன்று சேர்ந்து முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு அளித்தார்கள். ஆட்சியை மாற்ற வேண்டுமென்றோ, ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்றோ மனு அளிக்கவில்லை. முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. ஆகையால் அவரை மாற்ற வேண்டும் என்று மனு அளித்தார்கள். 
 

தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார்கள். காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள். முதலமைச்சர் என்பது பெரிய துறை. எல்லா துறைகளையும் கவனிக்கிறதுதான் முதலமைச்சர் வேலை. காவல்துறையை கையில் வைத்திருப்பார்கள். சில சிறு துறைகளை கையில் வைத்திருப்பார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி காவல்துறை மட்டுமல்ல, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையை வைத்துக்கொண்டார். 
 

ஏனென்றால் எல்லா துறைகளையும்விட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில்தான் அதிகமாக கொள்ளையடிக்க முடியும். ஆகையால் தவறு நடக்கிறது, லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதால் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று மனு அளித்தார்கள். இந்த கோரிக்கையை வைத்ததால் இவர்களை நீக்கிவிட்டார்கள். நீங்க தேர்ந்தெடுத்த எம்எல்ஏவை நீக்கிவிட்டார்கள். நீங்க தேர்ந்தெடுத்த எம்எல்ஏவை நீக்கினார்கள் என்றால், அப்படி நீக்கியவர்களுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டாமா? 


 

 

நான்கு தொகுதியில் ஏற்கனவே முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்தேன். இரண்டாம் கட்ட பிரச்சார்த்தை இங்கு முடிக்கிறேன். நான் அறிந்தவரையில் நான்கு தொகுதியில் இந்த தொகுதியில்தான் செந்தில் பாலாஜிதான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கு இந்த நான்கு தொகுதிதான் பயன்படப்போகிறது. ஏற்கனவே 115 நாம் வந்துவிட்டோம். ஆகையால் இதுவும் சேர்ந்துவிடும். இவ்வாறு பேசினார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.