Skip to main content

29 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் மீது அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு 

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

vaithilingam

 

2011 - 2016 அதிமுக ஆட்சிக்காலத்தின்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் ஒரத்தநாடு வைத்திலிங்கம். இவர் கட்டட அனுமதி வழங்குவதற்காக 2015 - 2016 காலகட்டத்தில் ஸ்ரீராம் குழும நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய்வரை லஞ்சமாகப் பெற்றதாக அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளது. 

 

ஸ்ரீராம் குழுமத்தின் ஸ்ரீராம் பிராபர்ட்டிஸ் அண்ட் இன்பிராஸ்ட்ரக்க்ஷர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக் 1453 வீடுகள் கொண்ட உயர்மட்ட கட்டுமானங்கள் திட்ட அனுமதிக்கு 2/12/2013 அன்று சிஎம்டிஏவில் விண்ணப்பம் செய்திருந்தனர். 2 ஆண்டுகளுக்கு மேல் காலம் தாழ்த்தி 24/2/2016 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்ட அனுமதிக்காக ரூ 27.9 கோடி முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் லஞ்சமாக பெற்றதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

 

'இந்த லஞ்சம், திட்ட அனுமதிக்காக மட்டும் கொடுக்கப்பட்ட லஞ்சமா அல்லது கட்டுமானத்தில் சட்டத்திற்கு புறம்பாக விதிமீறல் செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்' எனக் கோரிக்கை வைத்துள்ள அறப்போர் இயக்கம், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள் உட்பட அனைவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''எடப்பாடியை தவிர்த்து அதிமுக கூடிய சீக்கிரம் ஒன்று சேரும்''- ஓபிஎஸ் காதில் ஓதிய வைத்தியலிங்கம்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

 "AIADMK will come together soon without Edappadi" - Vaidyalingam recited in OPS's ears

 

அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில், பாஜக உடனான கூட்டணி குறித்து தனது அணி நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்திற்குப்  பிறகு ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “கடந்த ஒருமாத காலமாக மத்திய பாஜக தலைமையில் இருந்து தினந்தோறும் எங்களிடம் தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள். தேசிய அளவில் கட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் இந்தியாவை ஆள முடியும் என்ற சூழல் உள்ளது. பாஜக 2 முறை ஆட்சி செய்திருக்கிறது. 3வது முறையும் ஆட்சி செய்கின்ற தகுதியையும் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாக பாஜக தங்கள் நிலைப்பாட்டை அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம். பாஜக மாநிலத் தலைவரை மாற்றச் சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.

 

பின்னர் செய்தியாளர்கள் ஓபிஎஸ்ஸிடம் ''சார் மீண்டும் பழசெல்லாம் மறந்து அதிமுக ஒன்றிணைய வாய்ப்பிருக்கிறதா'' என கேள்வி எழுப்பினர். அதற்கு ''நாங்கள் அதிமுக ஒன்றுபட்டதால் வெற்றி என சொல்லிவருகிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி முடியாது முடியாது என சொல்லி இதுவரை 10 தோல்விகள் ஆகிவிட்டது'' என ஓபிஎஸ் சொல்லிக்கொண்டிருந்த பொழுது திடீரென ஓபிஎஸ் காதில் ஓதிய வைத்தியலிங்கம், பின்னர் செய்தியாளர்களை பார்த்து ''எங்களுடைய கணிப்பு எடப்பாடியை தவிர்த்து அதிமுக ஓபிஎஸ் தலைமையில் ஒன்றிணையும், கூடிய சீக்கிரத்தில். அது எங்களுடைய கணிப்பு'' என்றார்.

 

 

Next Story

100 கோடி ரூபாய் போலி பத்திரப்பதிவு அம்பலம்; வசமாக சிக்கிய நயினார் பாலாஜி - ஜெயராமன்

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

 Arappor Iyakkam Jayaram interview

 

பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகனுடைய போலி பத்திரப்பதிவு வழக்கு குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் விவரிக்கிறார்

 

நயினார் நாகேந்திரனின் மகனுடைய போலி பத்திரப்பதிவு குறித்த புகாரை முதலில் அறப்போர் இயக்கம்தான் வழங்கியது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, இளையராஜா என்பவரிடமிருந்து விருகம்பாக்கத்தில் 1.3 ஏக்கர் நிலத்தை 46 கோடிக்கு வாங்கினார். அதன் சந்தை மதிப்பு 100 கோடி வரை இருக்கும். சென்னையில் இருக்கும் இந்த நிலத்தை திருநெல்வேலியில் உள்ள சப்-ரெஜிஸ்டரார் அலுவலகத்தில் பதிவு செய்தனர். சட்டப்படி இது தவறு. யாருடைய நிலம் இது என்பதை அவர் சரிபார்த்திருக்க வேண்டும். 

 

இளையராஜா என்கிற நபர் ஏற்கனவே மோசடிகளுக்குப் பெயர் போனவராக இருக்கிறார். பட்டா சரியாக இருந்தால்தான் பத்திரப்பதிவு செய்யவே முடியும். இளையராஜாவின் பெயரில் அந்தப் பட்டா இல்லை. அந்த ஒரு நிலத்துக்கே 15 பதிவுகளும், பணப்பரிமாற்றங்களும் நடந்திருக்கிறது. அந்த சப்-ரெஜிஸ்டரார் இது எதைப் பற்றியும் விசாரிக்காமல் இவர்களோடு சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டார். திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. இவை அனைத்தையும் குறிப்பிட்டு நாங்கள் புகார் கொடுத்திருக்கிறோம்.

 

இப்போது அந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தவறே நடக்காமல் நடவடிக்கை எடுத்தால் அரசியல் பழிவாங்கல் என்று சொல்லலாம். இங்கு நடந்த அனைத்து தவறுகளுக்கும் ஆதாரம் இருக்கிறது. மற்றவர்கள்தான் தவறு செய்தனர், அவை தனக்குத் தெரியாது என்று நயினார் பாலாஜி சொல்கிறார். இவரும் சேர்ந்துதான் அந்த தவறைச் செய்திருக்கிறார். இளையராஜா என்பவர் இதில் மட்டுமல்லாமல், இதுபோல் பல குற்றங்களைச் செய்தவர். விசாரணையில்தான் இது குறித்த அனைத்து உண்மைகளும் வெளியே வரும்.

 

நயினார் பாலாஜி தானும் ஏமாற்றப்பட்டதாக சொல்கிறார். ஆனால் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. திருநெல்வேலியில் பத்திரப்பதிவு செய்ததே இவர்களுக்கு அங்கு செல்வாக்கு இருப்பதால்தான். பட்டா இல்லாத நிலத்தை ஒருவர் விற்க வந்தால் நீங்கள் எதையும் விசாரிக்காமல் வாங்கி விடுவீர்களா? இது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம். இவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று தங்களுக்கான தீர்வைப் பெறுவார்கள். ஆனால் சாதாரண ஏழை மக்களின் நிலை என்ன? அவர்கள் ஏமாற்றப்பட்டால் அவர்களால் கோர்ட்டுக்கு சென்று வாதாட முடியுமா?

 

இந்தத் துறையே ஒரு மாஃபியா துறை போல் இயங்கி வருகிறது. இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானிய மனிதர்கள்தான். இளையராஜா என்பவரை இவர்கள் கைது செய்திருந்தால் பல்வேறு உண்மைகள் வெளியே வந்திருக்கும். இந்த வழக்கு இன்னும் விசாரணை அளவில்தான் இருக்கிறது. அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பதால் குற்றவாளிகள் காப்பாற்றப்படும் சூழலும் இருக்கிறது.