Skip to main content

மேல்முறையீடு செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவர்கள் இடமாற்றம் ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்த அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் இட மாற்றம் செய்யப்பட்டதும், அவர்களுக்கு 17பி குறிப்பாணை வழங்கப்பட்டதும் செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மை என்றால், மிகவும் வருந்தத்தக்கதாகும்.

 

Ramadoss




காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப்படுத்த வேண்டும்; பட்ட மேற்படிப்பு மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும்; அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை  வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி வரை தமிழக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதற்காக மருத்துவர் சங்கங்களின் நிர்வாகிகள் 135 பேருக்கு 17பி குறிப்பாணை வழங்கிய தமிழக அரசு, அவர்கள் அனைவரையும் வெகு தொலைவுக்கு பணியிட மாற்றம் செய்து ஆணையிட்டது.

 

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம்,  அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டதை கடுமையாக கண்டித்தது. அதே நேரத்தில் அவர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகவும், இவ்விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்றும் விமர்சித்த உயர்நீதிமன்றம், அரசு மருத்துவர்கள் மீதான அமைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து ஆணையிட்டது. இதன்மூலம் அரசு மருத்துவர்கள் பணியிட மாற்ற சிக்கலுக்கு தீர்வு கிடைத்து விட்டதாக அனைவரும் நிம்மதியடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க தமிழக அரசு தயாராக இல்லை என்றும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் தயாராகி வருவதாகவும்  தெரிகிறது. அரசின் இம்முடிவு ஒரு சிக்கலை தீர்ப்பதற்கு மாறாக மேலும் சிக்கலாக்குவதற்கு ஒப்பானதாகும்.


 

மக்கள்நல அரசின் பெருமை என்பது ஒரு விவகாரத்தில் வெற்றி பெறுவதில் இல்லை; மாறாக அந்த பிரச்சினை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதில் தான் உள்ளது. அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடத்த எந்த உரிமையும் இல்லை; அவர்கள் இனி எந்த போராட்டமும் நடத்தக்கூடாது என்று கண்டித்த பிறகு தான் அரசு மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை  தமிழக அரசு ஏற்றுக் கொண்டால், அரசு மருத்துவர்கள் இனி போராட்டம்  நடத்த முடியாது என்ற நிலையை ஏற்படுத்தலாம். இது தான் அரசு மருத்துவத்துறைக்கு மிகவும் பயனளிக்கக்கூடியதாகும்.

 

 தமிழக அரசு மருத்துவர்கள் 135 பேர்  இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதால் அனைத்துப் பகுதிகளிலும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் இதய நோய், சிறுநீரக நோய், முடநீக்கியல், குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றி வந்த மூத்த அரசு மருத்துவர்கள், சாதாரண அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் மாற்றப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவுகள் எதுவும் இல்லாததால், அவர்களின் சிறப்பு மருத்துவ சேவை யாருக்கும் பயன்படவில்லை. அதேநேரத்தில், சிறப்பு மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதால் உயர்சிறப்பு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் உள்ள சிறப்பு மருத்துவப் பிரிவுகளில் போதிய மருத்துவர்கள் இல்லை. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தரமான மருத்துவம் அளிப்பது தான் அரசு மருத்துவமனைகளின் முதன்மை பணியாகும். ஆனால், மூத்த மருத்துவர்கள் மாற்றப்பட்டிருப்பதால்  மருத்துவமனைகளால் இந்த பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பாதிக்கப் படுவது ஏழை பொதுமக்கள் தான். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதிலும், செயல்படுத்துவதிலும் கவுரவம் பார்க்கத் தேவையில்லை. எனவே, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் இடமாற்றத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். உயர்நீதிமன்ற ஆணைப்படி,  இடமாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்களை அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய மருத்துவமனைகளில் மீண்டும் பணியமர்த்தவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பாணையையும் அரசு ரத்து செய்ய வேண்டும்''. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
1085 nominations accepted in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் - 36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் - 56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து திருவள்ளூர் -14, வட சென்னை - 49, தென் சென்னை - 53, மத்திய சென்னை - 32, ஸ்ரீபெரும்புதூர் - 32, காஞ்சிபுரம் - 13, அரக்கோணம் - 29, வேலூர் - 37, கிருஷ்ணகிரி - 34, தருமபுரி - 25, திருவண்ணாமலை - 37, ஆரணி - 32, விழுப்புரம் - 18, கள்ளக்குறிச்சி - 21, சேலம் - 27, நாமக்கல் - 48, ஈரோடு - 47, திருப்பூர் - 16, நீலகிரி - 16, கோயம்புத்தூர் - 41, பொள்ளாச்சி - 18, திண்டுக்கல் - 18, கரூர் - 56, திருச்சிராப்பள்ளி - 38, பெரம்பலூர் - 23, கடலூர் - 19, சிதம்பரம் - 18, மயிலாடுதுறை - 17, நாகப்பட்டினம் - 9, தஞ்சாவூர் - 13, சிவகங்கை - 21, மதுரை - 21, விருதுநகர் - 27, ராமநாதபுரம் - 27, தூத்துக்குடி - 31, தென்காசி - 26, திருநெல்வேலி - 26, கன்னியாகுமரி - 27 என மொத்தம் 1085 வேட்புமனுக்கள் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்தப்பட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 

Next Story

தமிழகத்தில் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல்! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
1749 nominations filed in Tamil Nadu
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி (27.03.2024) நாள் ஆகும்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 1403 பேர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதற்கான தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (28.03.2024) நடைபெற உள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் -  36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் -  56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.