Skip to main content

''பதில் வாங்கிட்டு  வாங்க... இல்லைனா அந்த நபரை மறந்துவிடலாம்''- அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம்!

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

"Answer and buy... otherwise forget that person"- Minister Senthilbalaji's criticism!

 

தான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை அண்ணாமலை பதிலளிக்கவில்லை என்று தமிழக மின்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ''இந்தியா முழுக்க இருக்கக்கூடிய மாநிலங்களில் ஒரே நிலைப்பாடுகள் தான் இருக்கிறது. ஒழுங்குமுறை ஆணையங்கள் இருக்கிறது. அது ஒரு தனிப்பட்ட, அரசு நிர்வாகத்தை விடுத்து தனிப்பட்ட முழு அதிகாரம் கொண்ட அமைப்பு. ஒழுங்குமுறை ஆணையத்தின் முழு அதிகாரத்தை பறிப்பதற்கான செயல்களில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. அதற்காகத்தான் மின்சார திருத்த சட்ட மசோதா கூட நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்வரின் வழிகாட்டுதல்படி நாடாளுமன்ற குழுத் தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

 

பொதுவாக மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களின் கொள்கைகளைக் கொண்டு ஆட்சி நடத்தும். ஒன்றிய அரசில் இருக்கக்கூடிய தேசிய கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பொழுது ஒரு நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். கர்நாடகாவில் என்ன மின் கட்டணம் இருக்கிறது, இங்கு என்ன மின் கட்டணம் இருக்கிறது, அவர்கள் ஆளக்கூடிய குஜராத்தில் மின் கட்டணம் எப்படி இருக்கிறது, உத்திர பிரதேசத்தில் மின் கட்டணம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு சீர்தூக்கி, அது சம்பந்தமான கருத்துக்களை சொல்ல வேண்டும். ஆனால் இங்கு வேலை வெட்டி இல்லாத நபர் ஒருவர் உங்களை சந்திப்பது, லைவில் வரவேண்டும், நீங்கள் தலைப்புச் செய்தியாக போட வேண்டும், அவர் பேசியது தொடர்பாக எங்களைப் போன்றவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும், அதனைச் செய்தியாக நீங்கள் போட வேண்டும்.

 

நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை அந்த நபர் பதில் சொல்லவில்லை. நிலக்கரி இறக்குமதியை எவ்வளவு தமிழக அரசு செய்தது, ஒன்றிய அரசு எவ்வளவு நிர்ணயம் செய்துள்ளது என்று கேட்டிருந்தேன். இதுவரை அதற்கு பதில் சொல்லவில்லை. அடுத்த முறை அவர் செய்தியாளர்களை சந்திக்கும்போது இதற்கெல்லாம் பதில் வாங்கி வந்து விடுங்கள். அப்படி இருந்தால் அடுத்தமுறை அவர் தொடர்பாக கேள்வி கேட்கலாம். இல்லையென்றால் அவரை மறந்து விடலாம்.

 

ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்ள வேண்டிய பக்குவம் இருக்க வேண்டும். தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். இந்த இரண்டுமே இல்லாத நபரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்'' என்று பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.