வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி பா.ம.க. நடத்தி வரும் போராட்டத்தால் சென்னையில் தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை அண்ணாசாலை மன்றோ சிலை அருகே நடந்த போராட்டத்தில் பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்றார். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “இட ஒதுக்கீடு போராட்டம் அரசியல் பிரச்சனை அல்ல, உரிமை பிரச்சனை” என்றார்.