நடராஜர் கோவில் விவகாரத்தில் திமுகவின் செயல்பாடுகள் இந்து சமயத்திற்கு எதிராக மட்டும் அல்ல,அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரானது என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடராஜர் கோவிலின் வழிபாட்டு நடைமுறைகளை சிதைக்கும் வகையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. வருடாவருடம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் விழாவின் கடைசி நான்கு நாட்களுக்குசிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபைபயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலைதமிழக அரசு கட்டுப்படுத்த நினைப்பது பக்தர்களை மட்டும் அல்ல, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதை அரசு அதிகாரிகளும்அமைச்சரும் நினைவில் கொள்ள வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சிதம்பரம் தீட்சிதர்கள்இந்து சமயத்தின் ஒரு உட்பிரிவு என்றும், சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாக அதிகாரம் தீட்சிதர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனை எதிர்த்து1953 ஆம் ஆண்டுமெட்ராஸ் மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 1959 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதி 107ன்படிஇந்து சமயத்தின் உட்பிரிவுகள் நிர்வகிக்கும் கோவில்களில்தமிழக அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
இன்று நடக்கும் அத்துமீறல் போல்முந்தைய திமுக ஆட்சியிலும்சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர2009 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்,தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சட்டத்திற்குப் புறம்பானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசால்இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல்சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொடர்ச்சியாக நிர்வாக இடைஞ்சல் ஏற்படுத்திகோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிதம்பரம் நடராஜர் கோவிலின்நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள நகைகள்தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் கோரிக்கைதீட்சிதர்களால் ஏற்கப்பட்டு அரசால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாமல் விரக்தியில் இருந்த இந்தத் திமுக அரசு, தொடர்ச்சியாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் எதோ ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
அதிகார வரம்பை மீறும் செயலாகசென்ற ஆண்டு மே மாதம்தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. கனகசபை மீது அனைவரும் ஏறி வழிபடலாம் என்ற அறிவிப்புடன் வெளியான அந்த அரசாணையைக் கூட தீட்சிதர்கள் எதிர்க்கவில்லை. ஆனித் திருமஞ்சனம் விழாவின் போதுகோவில் நகைகள் அனைத்தும் தில்லை நடராஜருக்கு அலங்காரமாக அணிவிக்கப்படுவதால்பாதுகாப்புக் காரணங்களுக்காகநான்கு நாட்கள்பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் இல்லாத ஒரு கோவிலில் அத்துமீறி நுழைந்துகோவில் நடைமுறையில் தலையிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான3500 ஏக்கர் நிலத்தைப் பராமரித்து வரும் தமிழக அரசின் சிறப்பு வட்டாட்சியர்கடந்த 15 ஆண்டுகளாக அந்த நிலத்தின் மூலமாக வந்த வருவாய் கணக்குகளை தெரிவிக்கவில்லை என்றும், கடந்த 15 ஆண்டுகளாக அந்த நிலத்தின் மூலமாக வரும் வருவாயைசிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள37000க்கும் மேற்பட்ட கோவில்களின் வருவாய் செலவினங்களை தனியார் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்ற மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கூட மதிக்காமல் செயல்பட்டு வரும் அமைச்சர் சேகர்பாபு, தனது அதிகார வரம்பை உணர்ந்தால் நன்று.
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களின் சொத்துக்கள்கொள்ளையடிக்கப்படுவதை கை கட்டி வேடிக்கை பார்ப்பதையும், ஆட்சியின் அவலங்களை மறைக்ககோவில்களில் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்குவதையும் திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்.திமுகவின் செயல்பாடுகள்இந்து சமயத்திற்கு எதிராக மட்டும் அல்ல,அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரானது. இந்து சமயத்தின் புனிதமான எந்தக் கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தைப் பரப்பி இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.