Skip to main content

“வெள்ளை அறிக்கை வெளியிட்டால் நீட் வேண்டும் என்பது தெரிந்துவிடும்” - அண்ணாமலை

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

Annamalai regarding NEET exam

 

தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டால் தமிழகத்திற்கு நீட் வேண்டும் என்பது தெரிந்துவிடும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இராணுவ வீரர் பிரபு மற்றும் கவுன்சிலரான சின்னசாமிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், சில வாரங்கள் முன் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்தத் தகராறு கைகலப்பாக மாறியது. இதில், இராணுவ வீரர் பிரபுவுக்கு கடுமையான காயம் ஏற்பட்டு பிறகு மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். இந்நிலையில் இன்று அவரது குடும்பத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், 10 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இதில் முக்கிய குற்றவாளியாக உள்ள கவுன்சிலரின் மகன் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுகிறார். அவரும் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளார். தந்தையும் மகனும் சேர்ந்து தாக்கியதில் ராணுவத்தில் பணி செய்தவரின் உயிர் போயுள்ளது. இது சராசரியான குற்றம் இல்லை. இந்த குற்றத்திற்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும். எங்களது குறைந்த பட்ச கோரிக்கை புனிதாவிற்கு அரசு வேலை, 5 கோடி இழப்பீடாக அரசு வைப்பு நிதியாக வழங்க வேண்டும். அனைத்து கட்சிகளும் அவர்கள் வளர வேண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைப்பார்கள். அது தவறு இல்லை. பாஜக மற்றவர்களுக்கு உழைப்பதற்காக இல்லை. நமது எம்.எல்.ஏக்கள் ஆட்சியில் அமர வேண்டும். நமது சித்தாந்தத்தின் அடிப்படையில் தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சியை தர வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

 

தமிழ்நாட்டில் நீட் தேர்வை தமிழக மாணவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். சமுதாயத்தில் இருந்து பின் தங்கிய மாணவர்கள் அரசுக் கல்லூரிகளில் படிக்கிறார்கள். நான் கடந்த 2 ஆண்டுகளாக வெள்ளை அறிக்கை என்ற ஒன்றை சொல்லிக்கொண்டு இருக்கிறேன். வெள்ளை அறிக்கை வந்துவிட்டால் நீட் தேர்வுக்கான விவாதம் அன்றே முடிந்துவிடும். கடந்த மூன்றாண்டுகளில் நடத்தப்பட்ட நீர் தேர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்ற பல பிரிவுகளில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்ற புள்ளி விபரத்தை அரசு வெளியிட வேண்டும். அது வந்துவிட்டால் தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டும் என நீங்களே ஒப்புக் கொள்வீர்கள். யார் யாரை சென்று பார்த்தாலும் கூட நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்யாது.” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் பறக்கும்படை சோதனை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Air force raids BJP state executive's house


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகி ஒருவர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் என்பவர் வீட்டில் பறக்கும் படையானது சோதனை நடத்தி வருகிறது. திருவள்ளூரில் பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்வதற்காக நிர்வாகி வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து,  பாடிய நல்லூரில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.