Skip to main content

பிரியா பெயரில் பாஜக நடத்தும் கால்பந்தாட்டம் - அண்ணாமலை பேட்டி

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

 Annamalai interview conducted by BJP in the name of Priya

 

சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்புக் காரணமாக நவ. 8-ம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.

 

அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நேற்று முன்தினம் (15.11.2022) காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார்.

 

 

மாணவியின் உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு நிதி உதவியையும் வழங்கினார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீராங்கனையின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''சகோதரி பிரியாவின் நிலைமை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. இப்பொழுதுதான் அவருக்குப் பிறந்தநாள் முடிந்திருக்கிறது. ஒரு பெரும் கனவைச் சுமந்துகொண்டு கால்பந்தாட்ட வீரராக இருந்த அவருக்குக் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாகக் காலை அகற்ற வேண்டிய கட்டாயம் வந்து, அதன் காரணமாக அவர் இறந்திருப்பது நம்முடைய மாநிலத்தில் இதுபோன்ற ஒன்றைப் பார்த்தது கிடையாது.

 

 Annamalai interview conducted by BJP in the name of Priya

 

குறிப்பாக மருத்துவ கட்டமைப்பு என்பது இந்தியாவிலே மிக ஆழமாக, மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. சம்பந்தப்பட்ட மருத்துவமனை முதல்வரின் தொகுதியில் இருப்பது வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. அரசு என்னதான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னாலும் இன்று பல அரசு மருத்துவமனைகள் இந்த நிலையில்தான் இருக்கிறது. வீராங்கனை பிரியாவின் இறப்பு மீடியாக்கள் மூலமாக வெளியே வந்திருக்கிறது. இதைத் தமிழகம் முழுவதும் பேசுகிறோம். ஆனால் இதேபோல் எத்தனை எத்தனையோ அரசு மருத்துவமனைகளில் நிர்வாகக் கோளாறு காரணமாக ஏற்படும் பல இறப்புக்கள் வெளியே வருவதில்லை. இதனை எல்லாம் உடனடியாக அரசு இரும்புக்கரம் கொண்டு எப்படி தமிழகத்தில் மருத்துவத்துறைக்கு ஒரு பெரிய பெயர் இருந்ததோ, அதை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

 

பிரியா தந்தை சொன்னார், பிரியாவுக்கு பிரதமர் மோடியைப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. “அப்பா நான் பெரிய கால்பந்தாட்ட வீராங்கனையாக மாறிய பிறகு என்னை மோடியிடம் கூட்டிக்கொண்டு போங்க. நான் என்னுடைய பதக்கங்களை அவரிடம் காட்ட வேண்டும், அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்” என்று உள்ளே சொன்னார்கள். இன்று ஒரு தந்தையாக என்னால் இதை நிறைவேற்ற முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். இன்னும் ஐந்து நாட்களில் பாஜக நிர்வாகிகள் உங்கள் வீட்டுக்கு மீண்டும் வருவோம். இந்திய அணியின் கால்பந்தாட்ட கேப்டன் ராமன் விஜயன் அவர்கள் தலைமையில் பாஜக நிர்வாகிகள் இங்கே வந்து இரண்டு விஷயங்களை இன்னும் ஐந்து நாட்களில் செய்வதாக உறுதி அளித்திருக்கிறோம். பிரியாவின் பெயர் சென்னை மாநகரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக பாஜக இந்த மழைக்காலம் முடிந்தவுடன் பிரியா பெயரில் சென்னை முழுவதும் ஒரு கால்பந்தாட்ட போட்டியை மிகப்பெரிய அளவில் நடத்திக் காட்டப் போகிறோம். அதேபோல் பிரியாவின் சகோதரர்கள் மூன்று பேர் கால்பந்தாட்டம் விளையாடுகிறார்கள். அவர்கள் கை காட்டுகின்ற பத்து மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கால்பந்தாட்ட பயிற்சி வழங்குவதற்கான முழுச் செலவையும் பாஜக ஏற்கும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.