Skip to main content

’அண்ணனுக்கு மாநில பொறுப்பு வேண்டும்’ - அழகிரி ஆதரவாளர்கள் கருத்து

Published on 21/08/2018 | Edited on 27/08/2018
az

 

அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறு பாடு மூலம் கடந்த நான்கு  வருங்களுக்கு முன்பு அழகிரியை கட்சியிலிருந்து ஓரம் கட்டியது அறிவாலயம். அதை தொடர்ந்து மதுரை, தேனி மாவட்டத்தில் பெரும்பான்மையாக  இருந்து வந்த அழகிரி ஆதரவாளர்களையும் தலைமை கட்சியிலிருந்து கட்டம் கட்டியது. அதன் பின் அழகிரியும் அரசியலில் ஆர்வம்  காட்டாமல் இருந்து வந்தார். ஆனால் அழகிரி ஆதரவாளர்களோ பிறந்த நாளை மட்டும் வெகு  சிறப்பாக மதுரை, தேனி மாவட்டத்தில் நடத்தி  வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள் .


     இந்த நிலையில் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த தலைவர் கலைஞர் திடீரென கடந்த 7ம்தேதி மறைந்தார்.  கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அழகிரி,   கட்சியில் உள்ள தொண்டர்கள் எல்லாம்  என் பக்கம் இருக்கிறார்கள் என்று  அதிரடியாக பத்திரிக்கைகளுக்கு பேட்டி  கொடுத்தார். அதை தொடந்து வருகிற 5ம்தேதி அழகிரி சென்னையில் பேரணி  நடத்தவும் இருக்கிறார்.
   

       இந்த நிலையில் திமுக  தலைமையும் செயற்குழுவை கூட்டியதில் கூட தளபதிதான் கட்சி தலைவராக வர வேண்டும். அவர் வழியில் தான் நாங்களும் தொண்டர்களும் இருக்கிறார்கள் என்று மாநில பொறுப்பில் உள்ள உ.பிகளும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் வருகிற 28 ம்தேதி பொது குழுவையும் திமுக தலைமை கூட்டி இருக்கிறது.


 
          இது பற்றி தேனி மாவட்டத்தில் உள்ள அழகிரி ஆதரவாளர்கள்....... தலைவர் இருக்கும் வரை அண்ணன் அழகிரி  கட்சியை பற்றி எதுவும் பேசவில்லை. அந்த அளவுக்கு தலைவர் மேல் மரியாதை வைத்து கொண்டு தான் தளபதி செயலையும் கண்டு  கொள்ளவில்லை. அப்படி  இருந்தும் மீண்டும்  அண்ணனை கட்சியில் இணைத்து பொறுப்பும் தரவில்லை. அதனால் டென்ஷன் அடைந்த அண்ணன்  தற்பொழுது தலைவர் மறைவுக்கு பிறகு விஸ்வரூபம் எடுத்து பேட்டி, பேரணி என அரசியலில்  அதிரடியாக மீண்டும் குதித்து  இருக்கிறார்.


       ஆனால்  தலைவர் இருந்த போது அண்ணனுக்கு தென் மாவட்ட பொறுப்பாளர் போஸ்டிங் கொடுத்ததால் திருமங்கலம்  இடைத் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற வைத்தார்.   அதன் மூலம் தென் மாவட்டங்களில்  அண்ணனுக்கு தனி செல்வாக்கு  இருக்கு. அதுபோல் வட மாவடங்களிலும் எங்களை போல் அண்ணன் ஆதரவாளர்களான பெரும்பாலான கட்சிகாரர்கள் இருக்கிறார்கள். அதனால   அண்ணன் தற்பொழுது தமிழக  அளவில்  அரசியல்  செய்ய இருக்கிறார். அதனால தான்  அண்ணன் விசுவாசிகளான நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால்,  அண்ணன்  அழகிரியை முதலில் கட்சியில் சேர்க்க வேண்டும்.

 அப்படி  அண்ணனை கட்சியில் சேர்த்தால்தான்  கட்சி மேலும் வழுவடையும்.  அதன் மூலம் அரசியல் எதிரிகளும் நம்மை கண்டு  பயப்படுவார்கள். அதை விட்டுவிட்டு நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு மூலம் மற்ற அரசியல் கட்சிகள்  அதன் மூலம் குளிர்காய்ந்து விடும். அதனால தலைவர் அடையாளம் காட்டிய தளபதியே தலைவராக இருக்கட்டும்.  ஆனால்  எங்க அண்ணன்  அழகிரிக்கு மாநில பொறுப்பு கொடுக்க வேண்டும்.  அதன் மூலம்   அண்ணனும் மாநில அளவில் அரசியல் பண்ணுவார்.  அதன் மூலம் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 40தொகுதிகளையும் கைப்பற்றுவதின் மூலம் சட்ட மன்ற தேர்தலில்  ஆட்சியை பிடிக்க முடியும். அதனால பொதுக்குழுவில் அண்ணனுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டும் அதுதான்  எங்களுடைய விருப்பமாகவும் இருக்கிறது என்று கூறினார்கள்.  ஆக திமுக தலைமை நடத்தும் பொதுக்குழுவில் அழகிரிக்கு பொறுப்பு கொடுத்தால் பேரணியை  கேன்ஷல் பண்ணிவிடுவார்.  இல்லை  என்றால் பேரணியை நடத்தி ஆழகிரி தன் பலத்தை  காட்ட இருக்கிறார்  என்பது தான் உண்மை.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.