Skip to main content

பெண்வேடமிட்ட  எம்.பி !!!

Published on 21/03/2018 | Edited on 21/03/2018
lady get up mp




ஆந்திர மாநிலத்திற்கு தனி அந்தஸ்து கேட்டு ஆந்திர எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடிவருகின்றனர். தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.கவின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நாடாளுமன்றத்தில் கோரிக்கைவைத்து போராடிவருகிறது. இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியை  எம்.பி ஒருவர்  தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்   நாடாளுமன்றத்திற்கு பெண் வேடமிட்டு வந்திருந்தார்.
 

சித்தூர் தொகுதி எம்.பி சிவபிரசாத் பெண் வேடமிட்டு தனது எதிர்ப்பை பதிவுசெய்தார். நிருபர்களிடம் சிவபிரசாத் இதுகுறித்து கூறுகையில். 

நீங்கள் ஆந்திர பெண்களுக்கு எத்தனையோ வாக்குறுதிகள் கொடுத்தீர்கள் அதனையெல்லாம் செய்தீர்களா? ஆந்திரப்பெண்கள் கோபமடைந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? இதற்கெல்லாம் எத்தனைப்போராட்டங்கள் செய்திருப்போம். நீங்கள் வந்தால் நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்வீர்கள் என்று நினைத்தோம். நீங்கள் என்னவென்றால் பணமதிப்பிழப்பைக் கொண்டுவந்து அந்த பாரத்தை எங்கள் தலையில் வைத்தீர்கள். உங்களுக்கு தெரியுமா கடைக்குச்சென்று இட்லி சாப்பிடக்கூட மக்கள் அஞ்சுகிறார்கள். பெண்கள் நகைவைத்துக்கொள்வதற்கும் ஒரு கட்டுப்பாடு. உங்களுக்குத்தெரியுமா ஏ.டி.எம் வாசலில் எத்தனை நபர்கள் இறந்தார்கள் என்று? உங்களுக்குத்தெரியுமா இன்னும் கொஞ்சநாள் போனால் பெண்களின் தாலியைகூட ஆதாருடன் இணைக்கசொல்வார்கள் போல என்று கூறினார். அப்போது அவர்  அவர் ஆந்திர பெண்ணைப் போலவே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது முதல்முறை அல்ல.  இதற்கு முன்பு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபொழுது, அமராவதி ஆற்றின் கட்டுமானத்திற்கு நிதி வேண்டி விவசாயிகள்போல் சட்டை, பஞ்சா மற்றும் மாலை அணிந்து, பானையில் தண்ணீர் வைத்துக்கொண்டு பிரதமரிடம் சென்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.