Anbumani Ramadoss says If there was an kalaignar taken a caste wise census

கலைஞர் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்திருப்பார் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் சூழல் உள்ளது. 69% இடஒதுக்கீட்டின் மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.

Advertisment

கலைஞர் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்திருப்பார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி தமிழ்நாட்டின் சமூகநீதியைப் பாதுகாக்க வேண்டும். பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெற எங்களை 25 தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும்” என்று பேசினார்.