Skip to main content

ஸ்டாலின் எங்கே பேசினாலும் எடுபடாது... அன்புமணி

Published on 19/05/2019 | Edited on 19/05/2019

 

தருமபுரி மக்களவைத் தொகுதியில் இன்று (19.05.2019) எட்டு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி பாராளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் நத்தமேடு வாக்குச்சாவடியில் நடந்த மறுவாக்குப்பதிவை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

anbumani ramadoss



அப்போது அவர், இது தேவையற்ற மறுவாக்குப்பதிவு. ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றால் அங்கு வாக்களித்த மக்கள் புகார் கொடுத்திருக்க வேண்டும் அல்லது வாக்குச்சாவடியில் உள்ள முகவர்கள் புகார் கொடுத்திருக்க வேண்டும். தேர்தல் அதிகாரி புகார் கொடுத்திருக்க வேண்டும். இங்கு உள்ள எட்டு வாக்குச்சாவடியில் யாருமே புகார் கொடுக்கவில்லை. திமுக முகவர்கள் உள்ளிட்ட யாருமே புகார் கொடுக்கவில்லை. 
 

திமுக வேட்பாளர் புகார் கொடுத்தார். அதற்கு காரணம் அவருக்கு தோல்வி பயம். இதனாலத்தான் நாங்கள் தோற்றோம் என காரணத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த முறையைவிட இந்த முறை அதிக வாக்குப்பதிவு நடக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வெளியூரில் இருக்கும் அனைவரும் வாக்களிக்க வந்திருப்பார்கள்.
 

ஸ்டாலின் பாஜகவுடன் பேசி வருகிறார்... மத்திய அமைச்சர் பதவிகள் கேட்டிருப்பதாக செய்திகள் பரவுகிறதே...
 

நிச்சயமாக அது உண்மையாக இருக்கும். ஏனென்றால் ஸ்டாலின் விரத்தியில் இருக்கிறார். என்னைக்கு நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தமோ அன்றிலிருந்து ஸ்டாலினுக்கு விரத்தி ஆரம்பித்துவிட்டது. ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் என்று சொன்ன ஸ்டாலின், மேற்கு வங்கம் சென்ற பிறகு அவரது பேச்சை மாற்றிக்கொண்டார். ஆனால் தமிழகம் வந்து மீண்டும் ராகுல்காந்திதான் பிரதமர் என்று சொல்லுகிறார். 


 

3வது அணி தொடர்பாக சந்திரசேகரராவிடம் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஸ்டாலின். அதுவும் சரியாக வருகிறதா இல்லையா என்று தெரியவில்லை. அடுத்து பாஜகவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே மிகுந்த குழப்ப நிலையில் ஸ்டாலின் இருக்கிறார். அவர் எங்கே பேசினாலும் எதுவும் எடுபடப்போவது கிடையாது. காரணம் அவர்கள் வெற்றிப்பெறபோவது கிடையாது. இவ்வாறு கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர்  இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர்  உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.

கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.

Next Story

“அ.தி.மு.க வாக்காளர்களே..” - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Anbumani Ramadoss appeal to ADMK voters

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அந்த வகையில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்ற பா.ம.க வேட்பாளரான சவுமியா அன்புமணியை ஆதரித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பாலக்கோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “தருமபுரி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். சவுமியா அன்புமணி ஐ.நா சபைக்கு சென்று பெண் உரிமைகளை பற்றியும், பெண் குழந்தைகளை பற்றியும் குரல் கொடுத்தவர். எங்கே பெண்களுக்கு பிரச்சனை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார். 

நாம் கால காலமாக திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து விட்டோம். நமது வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. எந்த விடியலும் இல்லை. உணர்வுப்பூர்வமாக உங்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் அரசியல் செய்கிறோம். நல்ல முடிவை எடுங்கள். அதிமுக வாக்காள பெருமக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் உங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் வரப்போவதில்லை. பிரதமராகவும் வரப்போவதில்லை. ஆகையால் இந்த முறை எங்களுக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள்” என்று கூறினார்.