நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

அதன்படி, வடசென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக ஆர்.சி. பால் கனகராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆர்.சி.பால் கனகராஜை ஆதரித்து, பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வடசென்னை தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Advertisment