Advertisment

அமமுக-எஸ்.டி.பி.ஐ. கூட்டணியின் மத்திய சென்னை வேட்பாளர் அறிவிப்பு

2019 நாடாளுமன்ற தேர்தலில், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதற்கான கூட்டணி அறிவிப்புகள் கடந்த வாரம் வெளியான நிலையில், அமமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

Advertisment

ammk-sdpi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இதையடுத்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து சென்னை பிராட்வே ஹயாத் மஹாலில் மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய சென்னை தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் ஆவாத் செரீப், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவியை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளராக அறிவித்தார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, அச.உஅமர் பாரூக், மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில வர்த்தகர் அணி தலைவர் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வழ.ராஜா முகமது, சுல்ஃபிகர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தெகலான் பாகவி, மத்திய சென்னை தொகுதியை இந்தியாவின் முன்மாதிரி தொகுதியாக மாற்ற அயராது பாடுபடுவேன் என உறுதி அளித்தார். மேலும், அமமுக-எஸ்.டி.பி.ஐ. கூட்டணி போட்டியிடும் 40 தொகுதிகளிலும் கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ammk announce Candidate chennai central SDPI
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe